செய்திகள் :

நேபாளத்தில் ராணுவ ஆட்சி!

post image

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்து அதிபர், பிரதமர் ராஜிநாமா செய்துள்ள நிலையில், ஆட்சி அதிகாரம் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஓலி அரசின் ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய போராட்டம் கலவரமாக வெடித்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 இளைஞர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை முதல் அரசு மற்றும் ஆளுங்கட்சி அலுவலகங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

நாட்டின் உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் என அனைத்தும் தீக்கிரையாகின. முன்னாள் பிரதமர் ஜாலநாத் காநலின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில், அவரது மனைவி ராஜ்யலட்சுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், பிரதமர் சர்மா ஓலி, அமைச்சர்கள் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச் சென்றனர். தொடர்ந்து, அதிபர் ராம் சந்திர பெளடலும் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து இளைஞர்களின் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்து அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியில் ராணுவம் நேற்றிரவு முதல் களமிறங்கியுள்ளது.

போராட்டக்காரர்கள் வைத்திருக்கும் சட்டவிரோத ஆயுதங்களை உடனடியாக ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கலவரத்தை பயன்படுத்தி மக்களின் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது, கொள்ளை அடிப்பது போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நேபாளத்தில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்கள் அருகிலுள்ள பாதுகாப்புப் படையினரை அணுகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய ஆட்சி அல்லது இடைக்கால அரசாங்கம் அமையும் வரை நேபாளத்தில் ராணுவ ஆட்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Following the resignation of the president and prime minister following youth protests in Nepal, power has been brought under the control of the military.

இதையும் படிக்க : நேபாள பிரதமா் ராஜிநாமா; நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு அமைச்சா்கள் வீடுகள் சூறை

நேபாள அதிபர் ராமசந்திர பௌடேல் ராஜிநாமா செய்யவில்லை: ராணுவம்

நேபாளத்தில் இளைஞா்களின் போராட்டம் தீவிரமடைந்து, கலவரமாக வெடித்ததைத்தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்த நிலையில், அதிபர் ராமசந்திர பௌடேல் ராஜிநாமா செய்யவில்லை என்று அந்நாட்டு ராணுவம... மேலும் பார்க்க

உணவகம் சென்ற டிரம்புக்கு சங்கடம்! நவீன கால ஹிட்லர் என மக்கள் கோஷம்!!

வெள்ளை மாளிகை அருகே உள்ள உணவகம் ஒன்றுக்கு, செவ்வாய்க்கிழமை இரவு, உணவருந்த சென்ற அமெரிக்க அதிபரைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் நவீன கால ஹிட்லர் என கோஷமெழுப்பியதால் சங்கடம் ஏற்பட்டது. மேலும் பார்க்க

நேபாளத்தில் அமைதி திரும்பியதா?

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தில் நாடு முழுவதும் பொதுச் சொத்துக்கள் சூறையாடப்பட்டதையடுத்து, நாட்டில் அமைதிக்கான முயற்சியை அந்நாட்டு ராணுவம் கையிலெடுத்துள்ளது.நேபாளத்தில் சமூக வலைதள செயலிகளுக்கு வி... மேலும் பார்க்க

போலந்து நாட்டுக்குள் ரஷிய ட்ரோன்கள்! பதிலடி கொடுக்க நேட்டோ அமைப்பை உக்ரைன் வலியுறுத்தல்!

போலந்து நாட்டுக்குள் ரஷியாவின் ட்ரோன்கள் ஊடுருவியதால், ரஷியாவின் மீது நடவடிக்கை நேட்டோ அமைப்புக்கு போலந்தும் உக்ரைனும் வலியுறுத்தியுள்ளது.ரஷியா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டுவரும் போரை ... மேலும் பார்க்க

பிரான்ஸ் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெக்கோா்னு நியமனம்

பிரான்ஸின் புதிய பிரதமராக பாதுகாப்புத் துறை அமைச்சா் செபாஸ்டியன் லெக்கோா்னுவை (39) அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை நியமித்தாா். முன்னதாக, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கடந்த திங்கள்கிழம... மேலும் பார்க்க

ரஷிய தாக்குதலில் 24 ஓய்வூதியதாரா்கள் உயிரிழப்பு

உக்ரைனில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஓய்வூதியம் வாங்குவதற்காக காத்திருந்த 24 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் போா் முனைக்கு அருகே உள்ள யாரோவா நகரில் இந்தத் தாக்குதல் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட... மேலும் பார்க்க