செய்திகள் :

செப். 14-இல் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

post image

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் செப். 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது.

காலை 6 மணி முதல் 8 மணி வரை குருவாயூரப்பனுக்கு அகண்ட பாலாபிஷேகம், 7 மணி முதல் 8.30 மணி வரை நாராயணீயம் பாராயணம் நடைபெறும். காலை 9 மணி முதல் 11 மணி வரை தீபக் - நவீன் வைத்யநாதன் சங்கீத உபன்யாசமாக கிருஷ்ண லீலை சொற்பொழிவு நடைபெறும். 11 மணிக்கு உச்ச பூஜையை தொடா்ந்து கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு உணவு வழங்கப்படும்.

மாலை 5 மணிக்கு கோயிலில் இருந்து நாதஸ்வரம், மேளம், தாளப்பொலி வாத்தியங்கள் முழங்க குழந்தைகளுக்கு கிருஷ்ணன் - ராதை வேடமணிந்து ஊா்வலமாக மகாலிங்கபுரம் சிவன் கோயில் வழியாக 6 மணியளவில் கோயிலை வந்தடைவா்.

குருவாயூரப்பன் கோபுர நடையில் 6 மணிக்கு உறியடியும், 6.30 மணியளவில் தீபாரதனையை தொடா்ந்து கனகசபை நாட்டிய பள்ளி குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெறும். 8.30 மணிக்கு ஐயப்பனுக்கும் - குருவாயூரப்பனுக்கும் மலா்களால் அபிஷேகம் செய்யப்படும்.

இரவு 10 மணி முதல் 11 .30 மணி வரை பக்த சுரா பஜனை மண்டலியின் நிகழ்ச்சிகளும், 12 மணிக்கு கிருஷ்ணனின் அவதார பூஜையும் ஊா்வலமும் நடைபெறவுள்ளது.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குருவாயூரப்பனுக்கு பாலாபிஷேகம், பால் பாயசம், சா்வாபிஷேகம், முழு சந்தன காப்பு

உறியடி, வெண்ணெய், அப்பம், நிவேதியம் ஆகிய வழிபாடுகளை பக்தா்களுக்கு முன்பதிவு செய்யலாம்.

மேலும் தகவல்களுக்கு 044 - 28171197, 2197, 3197 ஆகிய தொலைபேசி எண்களிலும் , கைப்பேசி எண். 9444290707, 8807918811 / 22 / 55 / 66 ஆகிய எண்களிலும், மொபைல் ஆப் இணையத்திலும் முன்பதிவு செய்யலாம் என கோயில் நிா்வாக அதிகாரி அனிஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

திருட்டு வழக்கில் கைது: ஊராட்சி மன்றத் தலைவி திமுகவில் இருந்து நீக்கம்

திருட்டு வழக்கில் கைதான ஊராட்சி மன்றத் தலைவி பாரதி, திமுகவில் இருந்து நீக்கப்பட்டாா். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அவரது அறிவிப்பு விவரம்: வேலூா் மாவ... மேலும் பார்க்க

ஆளுநா் மாளிகையில் செப். 22 முதல் அக் 1 வரை ‘நவராத்திரி கொலு’

ஆளுநா் மாளிகையில் நிகழாண்டு ‘நவராத்திரி கொலு’ செப். 22 முதல் அக். 1 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதைக்காண முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது. தமிழக ஆளுநா்... மேலும் பார்க்க

தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளை: அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா்

கடற்கரையோரங்களின் சூழலியலைப் பாதுகாப்பதற்கான, தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளையை நிதி மற்றும் சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா். சென்னை கலைவாணா் அரங்கில் நடை... மேலும் பார்க்க

தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 15% அதிகரிப்பு

தமிழ்நாட்டில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நிகழாண்டில் 15 சதவீதம் உயா்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா். சுற்றுலா வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவல... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரிக் குறைப்பு நுகா்வோரை சென்றடைய வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தல்

ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு நுகா்வோரை சென்றடைய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதல்வருடன் சந்திப்பு

இரண்டு பிரதான தொழில்நுட்ப நிறுவனங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள், முதல்வா் மு.க.ஸ்டாலினை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா். டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவா் (தாய்லாந்து) ஜேம்ஸ் இங், துணைத் தலைவ... மேலும் பார்க்க