செய்திகள் :

Nepal: போராட்டக்காரர்கள் தீவைத்ததில் உயிரிழந்த முன்னாள் பிரதமரின் மனைவி - என்ன நடக்கிறது அங்கே?

post image

நேபாளம் நாட்டில் நடந்துவந்த மாணவர் போராட்டம் இன்று பெரும் வன்முறையாக மாறியிருக்கிறது. அமைச்சர்களின் வீடுகள், பிரதமரின் வீடு, நாடாளுமன்றம், உச்ச நீதிமன்ற கட்டடம் என அரசு தொடர்பான பல இடங்களையும் ஊடக அலுவலகங்களையும் போராட்டக்காரர்கள் சூறையாடியும், தீவைத்து எரித்தும் வருகின்றனர்.

வன்முறையின் ஒரு பகுதியாக முன்னாள் பிரதமர் ஜலந்த் கானலின் வீடு தீ வைக்கப்பட்டது. அதில் சிக்கிய அவரது மனைவி ராஜ்யலக்‌ஷ்மி சித்ரகார் உயிரிழந்ததாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் வழங்கப்படவில்லை.

தாக்குதலுக்கு உள்ளாகும் நேபாளம் நாடாளுமன்றம்

ஒரு ஊடக அறிக்கையில் கலகக்காரர்கள் ராஜ்யலக்‌ஷ்மியை அறையில் பூட்டி பின்னர் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. மற்றொன்றில் அவர் கீர்த்திபூர் மருத்துவமனைக்கு தீ காயங்களுடன் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

Nepal Violence

முன்னதாக நிதியமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடல் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு தப்பித்து ஓடும் காட்சிகள் பரவி வந்தன.

அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

வெளியுறவுத்துறை அமைச்சர் அர்சு ராணா தியூபா வீட்டில் அவரும் அவரது மனைவியும் தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாளம் போராட்டம்
நேபாளம் போராட்டம்
நேபாளம் போராட்டம்
நேபாளம் போராட்டம்
நேபாளம் போராட்டம்

அமைச்சர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கும் சமத்துவமின்மை போராட்டத்தின் முக்கிய காரணியாக இருப்பதனால் அவர்களது இல்லங்கள் மற்றும் உடைமைகள் கொளுத்தப்படுவதாகப் பார்கப்படுகிறது.

ஆனால் போராட்டத்தில் வெளிநாட்டு சக்திகள் தூண்டுதலினால் வன்முறை அதிகரிப்பதாகத் தெரிவித்துள்ளது அரசு. எனினும் போராட்டக்காரர்கள் 19க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பே பெரும் வன்முறையைத் தூண்டியதும் குறிப்பிடத்தக்கது.

Nepal Violence: ரத்தம் வழிய அழுதபடி வந்த முன்னாள் பிரதமர்; மனைவி மீதும் தாக்குதல் - என்ன நடந்தது?

நேபாளம் நாட்டில் ஊழல், பொருளாதார சமத்துவமின்மை, வாரிசு அரசியலுக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியிருக்கிறது. இதில் முன்னாள் பிரதமர் ஷேர் பஹதூர் தியூபா மற்றும் அவரது மனைவி அர்சு ராணா தியூபா கடுமையாகத் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி கண்ணாடி பாலம்: கீறல் விழுந்த கண்ணாடி மாற்றப்பட்டது- நாளை முதல் சுற்றுலா பயணிகள் அனுமதி!

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு டிசம்ப... மேலும் பார்க்க

`என்.டி.ஏ கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால் மீண்டும் இணைய தயார்'- சொல்கிறார் டி.டி.வி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஜீயரை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின் செய்தியா... மேலும் பார்க்க

Vice President Election: தமிழகத்திலிருந்து 3-வது துணை ஜனாதிபதி; வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன்!

துணை குடியரசு தலைவராகப் பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல் நலக்குறைவை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய துணை குடியரசு தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று(... மேலும் பார்க்க

"காவல்துறை அனுமதிகொடுக்கவில்லை என 'சாக்கு' சொல்லக் கூடாது" - விஜய்க்கு அண்ணாமலை அட்வைஸ்!

இந்தியா டுடே பத்திரிகையின் நேர்காணலில், "அதிமுகவுக்கு அட்வைஸ் வழங்க மாட்டோம், அடுத்த கட்சி எப்படி செயல்பட வேண்டும் என வெளியில் இருந்து கூறுவது சரியானது அல்ல" என்று பேசிய முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அ... மேலும் பார்க்க

புதுச்சேரி: 5 பேர் உயிரிழப்புக்குக் காரணம் குடிநீரா? - மருத்துவமனையில் தஞ்சமடையும் மக்கள்!

புதுச்சேரி நகரப் பகுதிகளில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக, கடந்த சில மாதங்களாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றன. கடந்த செப்டம்பர் 5-ம் தேதி கோவிந... மேலும் பார்க்க