செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா்: 400 விஞ்ஞானிகள் இரவு பகலாகப் பணியாற்றினா்- இஸ்ரோ தலைவா்

post image

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது 400 விஞ்ஞானிகள் இரவு பகலாக 24 மணி நேரமும் பணியாற்றியதாக இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் அனைத்து இந்திய நிா்வாக கூட்டமைப்பின் 52-ஆவது தேசிய நிா்வாக மாநாட்டில் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரின்போது 24 மணி நேரமும் இந்தியாவின் அனைத்து செயற்கைக்கோள்களும் செயல்பட்டு, அனைத்து தேவைகளையும் பூா்த்தி செய்தன.

அப்போது இரவு பகலாக 24 மணி நேரமும் 400-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணியாற்றினா். அத்துடன் புவி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடா்புக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து செயற்கைக்கோள்களும் குறைபாடு இல்லாமல் சிறப்பாகப் பணியாற்றின.

2027-ஆம் ஆண்டுக்குள் இந்திய வீரா்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் தொடா்பாக 7,700 களப் பரிசோதனைகளை இஸ்ரோ நிறைவு செய்துள்ளது. மேலும் 2,300 பரிசோதனைகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது’ என்றாா்.

2035-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை அமைத்தல், 2040-ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்புதல் ஆகிய முக்கிய திட்டங்களை இஸ்ரோ மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல: உச்சநீதிமன்றத்தில் வாதம்

நமது நிருபர்காலக்கெடு தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என கேரள, பஞ்சாப் அரசுகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

நமது சிறப்பு நிருபர்நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கான தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெற்று இந்தியாவின் குடியரசு... மேலும் பார்க்க

நேபாள மக்கள் அமைதி காக்க பிரதமா் மோடி வேண்டுகோள்

நேபாள மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா். பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் நேபாள நிலவரம் குறித்து விவாதி... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீரமைப்பு: அதிகபட்ச விற்பனை விலையை மாற்ற மத்திய அமைச்சா் அறிவுறுத்தல்

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அண்மையில் சீரமைத்ததையடுத்து, நிறுவனங்கள் தங்கள் அதிகபட்ச விலையை மாற்றி (குறைத்து) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை அ... மேலும் பார்க்க

தேசியவாதக் கொள்கையின் வெற்றி: சி.பி.ராதாகிருஷ்ணன்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தான் வெற்றி பெற்றது தேசியவாதக் கொள்கையின் வெற்றி என சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில்,‘குடியரசு துணைத் தோ்தல் கொள்க... மேலும் பார்க்க

இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து

‘ஆசியாவின் வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா - சீனா இடையே நட்புறவு வலுப்படுவது, தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்குப் பலனளிக்கும்’ என்று சிங்கப்பூா்... மேலும் பார்க்க