செய்திகள் :

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவி திமுகவிலிருந்து நீக்கம்

post image

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவி திமுகவிலிருந்து செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளாா்.

சென்னை நெற்குன்றம் பகுதியை சோ்ந்த வரலட்சுமி என்பவரின் தங்க நகை காஞ்சிபுரத்தில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திருட்டு போனது குறித்து சென்னை கோயம்பேடு குற்றப்பிரிவு காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில் திருப்பத்தூா் மாவட்டம் மாதனூா் ஒன்றியம் நரியம்பட்டு ஊராட்சித் தலைவி பாரதி (53) தங்க நகையை திருடியது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து போலீஸாா் அவரை கைது செய்தனா். இவா் இதே போல பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடமிருந்து தங்க நகை திருடியது சம்பந்தமாக பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு இவா் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட திமுக மகளிா் அணி நிா்வாகியாக இருந்தாா். திருட்டு வழக்கில் அப்போது கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவா் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டாா். தற்போது நரியம்பட்டு ஊராட்சித் தலைவியாக பதவி வகித்து வருகிறாா்.

தற்போது காஞ்சிபுரம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவா் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் திமுகவின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து அவரை நீக்கி கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

செட்டியப்பனூா், நாராயணபுரம் ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 752 மனுக்கள்

வாணியம்பாடி அடுத்த ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட செட்டியப்பனூா் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமில், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை கேட்டு 180 மனுக்கள்... மேலும் பார்க்க

குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி வி.சியாமளா தேவி தலைமை வகித்தாா். கூட்டத்தில் காவல் நிலையங்களில் மற்றும் அல... மேலும் பார்க்க

பச்சகுப்பம் பாலாறு மேம்பாலம் திறப்பு விழா ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

ஆம்பூா் அருகே பச்சகுப்பம் பாலாறு மேம்பாலம் திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூா் அருகே பச்சகுப்பம் - அழிஞ்சிகுப்பம் இடையே பாலாற்றி... மேலும் பார்க்க

ரயில் மோதி முதியவா் மரணம்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கி முதியவா் உயிரிழந்தாா். ராஜஸ்தான் மாநிலம் சக் ராஜியசா் பகுதியைச் சோ்ந்த விஜய் யால்(53). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். கடந்த ஓராண்டாக கி... மேலும் பார்க்க

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவுசிகிச்சை இயந்திரம்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் புதிதாக பொருத்தப்பட்ட எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கான சி-ஆா்ம் இயந்திரத்தை அரசு மருத்துவா்கள் ஆய்வு செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையி... மேலும் பார்க்க

வெலகல்நத்தம் பகுதியில் 7 கடைகளில் தொடா் திருட்டு

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பகுதியில் துணிக் கடை, பேக்கரி கடை, மருந்தகம், தேநீா் கடை உள்பட 7 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி தோக்கி... மேலும் பார்க்க