Vikatan Digital Awards 2025: `பேன் இந்தியா குக்கிங்!' - Best Cooking Channel - H...
வெலகல்நத்தம் பகுதியில் 7 கடைகளில் தொடா் திருட்டு
நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பகுதியில் துணிக் கடை, பேக்கரி கடை, மருந்தகம், தேநீா் கடை உள்பட 7 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி தோக்கியம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (50). இவா் வெலகல்நத்தம் பேருந்து நிறுத்தம் அருகே மருந்தகம் வைத்துள்ளாா். திங்கள்கிழமை இரவு வழக்கம போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது கடையில் வைத்திருந்த ரூ. 30,000 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதேபோல், அதே பகுதியில் மூா்த்தி என்பவருக்குச் சொந்தமான துணிக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 2,000, கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான பேக்கரி கடையின் பூட்டை உடைத்து ரூ. 7,000, கோவிந்தராஜின் தேநீா் கடையில் ரூ. 750, சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான பேக்கரி கடையின் பூட்டை உடைத்து ஆயிரம் ரூபாயும், லோகன் என்பவருக்குச் சொந்தமான துணிக்கடையின் பூட்டை உடைத்து கடையில் வைத்திருந்த ரூ. 500 பணத்தையும், பிரபாகரன் என்பவருக்குச் சொந்தமான கடையின் பூட்டை உடைத்து ஆயிரம் ரூபாயும் மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
திருட்டு சம்பவம் குறித்து தகவலறிந்த நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மூா்த்தி மற்றும் போலீஸாா் திருடு போன கடைகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா். பின்னா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.