செய்திகள் :

``தந்தையின் சொத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும்'' - கரிஷ்மா கபூரின் குழந்தைகள் கோர்ட்டில் வழக்கு

post image

பிரியா சச்சிதேவ்

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

அவரது மரணத்தால் அவர் விட்டுச்சென்ற சொத்திற்கு மனைவிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. சஞ்சய் கபூர் மூன்றாவதாக பிரியா சச்சிதேவ் என்பவரை திருமணம் செய்திருந்தார்.

பிரியாவிற்கு இத்திருமணத்தின் மூலம் ஒரு மகன் இருக்கிறார். சஞ்சய் கபூர் இறந்தவுடன் சஞ்சய் கபூரின் கம்பெனியில் பிரியா சச்சிதேவ் தன்னை ஒரு இயக்குநராக உள்ளே நுழைத்துக்கொண்டார்.

இதற்கு சஞ்சய் கபூரின் தாயார் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். சஞ்சய் கபூரின் கம்பெனி ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டது ஆகும். அதோடு சஞ்சய் கபூருக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது.

இந்த சொத்துக்களை ஒட்டுமொத்தமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் விதமாக பிரியா சச்சிதேவ் காய்களை நகர்த்தி வருகிறார்.

சஞ்சய் கபூர்

கரிஷ்மா கபூரை சஞ்சய் கபூர் இரண்டாவதாக திருமணம் செய்தார். ஆனால் அவரை அவரது கணவர் சஞ்சய் கபூர் விவாகரத்து செய்துவிட்டார்.

அதோடு விவாகரத்து செய்யும்போது இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து ரூ.14 கோடி பத்திரம் எடுத்து கொடுத்திருக்கிறார். இதன் மூலம் மாதம் ரூ.10 லட்சம் கிடைக்க சஞ்சய் கபூர் வகை செய்திருக்கிறார்.

அதோடு மும்பையில் ஒரு வீட்டையும் அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். ஆனாலும் கரிஷ்மா கபூரின் இரண்டு பிள்ளைகளான சமைரா மற்றும் கியான் ஆகியோர் சேர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதில் தங்களது தந்தையின் சொத்தில் தங்களுக்கு பங்கு கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

உயில்

அவர்கள் தங்களது மனுவில்,''தங்கள் வளர்ப்புத்தாய் பிரியா சச்தேவ், சஞ்சய்யின் உயிலை போலியாக தயாரித்துள்ளார். தங்கள் தந்தையால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் உயில் சட்டப்பூர்வமான மற்றும் செல்லுபடியாகும் ஆவணம் அல்ல, போலியானது மற்றும் ஜோடிக்கப்பட்டதாகும்.

இந்தக் காரணத்தினால்தான் உயிலின் மூலப் பிரதியையோ அல்லது உயிலின் நகலையோ எங்களுக்கு காட்டப்படவில்லை. எனவே அந்த ஆவணத்தின் நகலை தங்களுக்கு வழங்க உத்தரவிடவேண்டும்.

சஞ்சய் கபூருடன் கரிஷ்மா கபூர்

பிரச்னைக்கு தீர்வு காணப்படும் வரை உயிலை நிறைவேற்ற பிரியா சச்சிதேவிற்கு தடைவிதிக்கவேண்டும் என்று அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் இவ்விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

புதிய திருப்பமாக பிரியா சச்சிதேவ் தனக்கு முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகள் சபிராவின் பெயரோடு கபூர் என்ற பெயரை சேர்த்திருக்கிறார்.

சொத்தில் அவருக்கும் உரிமை இருக்கிறது என்பதை நிரூபிக்க சபிராவின் பெயரோடு கபூர் பெயரை பிரியா சச்சிதேவ் இணைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

எலுமிச்சை பழத்தில் ஏறியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார் - என்ன நடந்தது?

புதிய கார் அல்லது வாகனம் வாங்கினால் அதனை கோயிலுக்கு எடுத்துச்சென்று பூஜை செய்வது வழக்கம். சிலர் வாகனம் வாங்கியவுடன் அதனை முதலில் எலுமிச்சம்பழத்தின் மீது ஏற்றுவதை சம்பிரதாயமாக வைத்துள்ளனர். டெல்லியில் ... மேலும் பார்க்க

தனிமையை போக்க `காதலரை வாடகைக்கு' எடுத்த பெண் - ஜப்பானில் பிரபலமாகும் கலாசாரம்; பின்னணி என்ன?

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் உறவுகளை தக்கவைக்கும், மேம்படுத்தும் செயல்களில் பல சவால்கள் உள்ளன. இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ‘காதல் தொடர்புகள்’ உருவாக்கும் கலா... மேலும் பார்க்க

``உடல் எடையை குறைக்க சன்மானம்!'' - ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் கொடுத்த நிறுவனம்; என்ன காரணம்?

சீனாவின் ஷென்ழெனை (Shenzhen) தளமாகக் கொண்ட Insta360 என்ற நிறுவனம், தனது ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையவாசிகள் இடையே பெரும் கவனம் பெற்று வருகிறது.உடல் எடை | மாதிரிப்படம்ச... மேலும் பார்க்க

விநாயகர் சிலை கரைப்பு: முதல்வர் மனைவியுடன் சேர்ந்து மும்பை கடற்கரையை சுத்தம் செய்த அக்‌ஷய் குமார்

மும்பையில் நேற்று காலையில் இன்று அதிகாலை வரை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. இதனால் மும்பையில் உள்ள கடற்கரையில் அதிகமான குப்பைகள் கிடக்கின்றன. பூஜைபொருட்கள் மற்று... மேலும் பார்க்க

பிக்பாஸ் 19: போட்டியில் பங்கேற்ற நடிகையின் கதையை கேட்டு கண் கலங்கிய சல்மான் கான்

இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் நடத்தி வருகிறார். தற்போது பிக்பாஸ் 19வது பருவம் நடந்து வருகிறது. இதில் நடிகை குனிக்கா சதானந்த் கலந்து கொண்டுள்ளார்.மற்றொரு போட்டியாளர் பர்ஹானா, நடிகை... மேலும் பார்க்க

கொல்கத்தா: காபி கப்களில் சித்திரங்கள்; வாடிக்கையாளர்களை ஈர்க்கும் தெருவோர வியாபாரி!

கொல்கத்தாவின் டோலிகஞ்ச் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் ஒரு தெருவோர வியாபாரி, ஸ்டார்பக்ஸ் பாணியில் தனித்துவமாக காபி பரிமாறுகிறார். வாடிக்கையாளரின் பெயரை கோப்பையில் எழுதுவதற்கு பதிலாக, அவர்களின் முகத்தை க... மேலும் பார்க்க