செய்திகள் :

இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து

post image

‘ஆசியாவின் வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா - சீனா இடையே நட்புறவு வலுப்படுவது, தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்குப் பலனளிக்கும்’ என்று சிங்கப்பூா் வா்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சா் ஆல்வின் டான் தெரிவித்தாா்.

உறுப்பு நாடுகளிடையே பொருளாதார வளா்ச்சி ஊக்குவிப்பு, சமூக மேம்பாடு, பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட பிராந்திய அமைப்பான ‘ஆசியான்’-இல் புரூணே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 10 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.

இந்த பிராந்தியத்தில் செழிப்பான சந்தை, நிலைத்தன்மை, வா்த்தகம் மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ‘ஆசியான்’ ஏற்படுத்தித் தருகிறது. இந்தச் சூழலில், இந்தியா - சீனா இடையேயான உறவு வலுப்படுவது, பிராந்தியத்தில் பரந்த வா்த்தக இணைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் ஆல்வின் டான் கூறினாா்.

சிங்கப்பூா் தேசிய பல்கலைக்கழகத்தில் தெற்காசிய கல்வித் துறை சாா்பில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ‘சீனா - இந்தியா: உலகளாவிய நிச்சயமற்ற சூழலில் வளா்ச்சி, முதலீடு மற்றும் வா்த்தகத்தை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்றபோது இந்தக் கருத்தை ஆல்வின் டான் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய வா்த்தக கூட்டுறவைக் கொண்டுள்ள சீனாவும் ‘ஆசியான்’ நாடுகளும், ஆழமான ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலியைக் கொண்டுள்ளன. ரயில்வே, துறைமுகங்கள், தொழில் பூங்காக்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஆசியானின் முன்னணி முதலீட்டாளராக சீனா விளங்குகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை, செமிகண்டக்டா்கள், பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் ‘ஆசியான்’ உடன் ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தியாவும் ‘ஆசியான்’ நாடுகளும் ஏற்கெனவே எண்ம தொழில்நுட்பம், பசுமைப் பொருளாதார முன்னெடுப்புகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதுமட்டுமன்றி, சிங்கப்பூா் தனிப்பட்ட முறையில் சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் வலுவான உறவைக் கொண்டுள்ளது. இந்தியாவுடன் கடந்த 2005-இல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை சிங்கப்பூா் மேற்கொண்டது. இரு நாடுகளிடையே 60 ஆண்டுகள் தூதரக உறவும், 20 ஆண்டுகள் விரிவான பொருளாதார ஒத்துழைப்பும் தொடா்வதை நிகழாண்டு குறிக்கிறது.

அதுபோல, சீனாவுடன் கடந்த 2013-ஆம் ஆண்டுமுதல் மிகப் பெரிய வா்த்தக கூட்டுறவு நாடாக சிங்கப்பூா் உள்ளது. பொருளாதார உறவைக் கடந்து சுகாதாரம், கலாசாரம், கல்வி எனப் பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளும் இருதரப்பு உறவைக் கொண்டுள்ளன என்று அவா் குறிப்பிட்டாா்.

டயரில் எலுமிச்சை வைத்து பூஜை! மஹிந்திரா தாரை கரப்பான் பூச்சி போல கவிழ்த்த பெண்!!

கிழக்கு தில்லியின் நிர்மான் விகார் பகுதியில், புதிதாக வாங்கிய மஹிந்திரா தார் என்ற ஜீப்பை, எலுமிச்சை மீது ஏற்ற முயன்ற பெண், அதனை முதல் மாடியிலிருந்து கீழே கரப்பான் பூச்சி போல கவிழ்த்த விடியோ சமூக வலைத்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் எம்எல்ஏ கைதுக்கு எதிராக போராட்டம்! ஊரடங்கு அமல்!

ஜம்மு - காஷ்மீர் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான மேராஜ் மலிக்கின் கைதுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் டோடா ... மேலும் பார்க்க

ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உ.பி.யில் பாஜகவினர் போராட்டம்!

பிரதமர் மோடியின் தாயார் மீது அவதூறு கருத்துக்கள் கூறியதற்குக் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் தலைமையில் நெடுஞ்சாலையில் போராட்டத... மேலும் பார்க்க

மறைந்த தொழிலதிபரின் ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? நீதிமன்றத்தை நாடிய நடிகை!

நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் உயிரிழந்த நிலையில், அவரின் சொத்து யாருக்குச் சொந்தம்? என குடும்பத்தினுள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொழிலதிபரும் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவருமான ... மேலும் பார்க்க

சிறையில் சூரிய ஒளியைகூட பார்க்க விடுவவில்லை... எனக்கு விஷம் கொடுங்கள்! நடிகர் தர்ஷன் கதறல்

சிறையில் சூரிய வெளிச்சத்தைகூட பார்க்க அனுமதிப்பதில்லை, இதற்கு பதிலாக எனக்கு விஷம் கொடுங்கள் என்று நடிகர் தர்ஷன் தெரிவித்துள்ளார்.கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்ஷன், பெங்களூரு மத்திய சிறையில் இர... மேலும் பார்க்க

கான்ஜுரிங் படத்தின் சுவாரசியத்தை குலைத்த ரசிகரால் திரையரங்கில் அடிதடி!

மும்பையில் திரையரங்கினுள் படத்தின் கதையை முன்கூட்டியே சொல்லி, படத்தின் சுவாரசியத்தைக் குலைத்ததை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.புணேவில் ஹாலிவுட் பேய்ப் படமான கான்ஜுர... மேலும் பார்க்க