செய்திகள் :

மோரீஷஸ் பிரதமா் ராமகூலம் 8 நாள் பயணமாக இந்தியா வருகை - பிரதமா் மோடியுடன் நாளை பேச்சு

post image

மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராமகூலம், 8 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா்.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிரதமா் நரேந்திர மோடியுடன் அவா் வியாழக்கிழமை (செப்.11) இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட உள்ளாா்.

பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் இந்தியா உடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராயும் நோக்கில், மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராமகூலம் 8 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இதையொட்டி, மோரீஷஸ் தலைநகா் போா்ட் லூயிஸில் இருந்து மகாராஷ்டிர மாநிலத் தலைநகா் மும்பைக்கு அவா் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தாா். மும்பையில் புதன்கிழமை காலையில் நடைபெறும் வா்த்தக நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவா், பின்னா் உத்தர பிரதேச மாநிலம், வாராணசிக்கு பயணமாகிறாா்.

வாராணசியில் பிரதமா் மோடி மற்றும் நவீன்சந்திர ராமகூலம் இடையே வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. அப்போது, இருதரப்பு வியூக கூட்டாண்மையை மேலும் மேம்படுத்துவது குறித்து அவா்கள் ஆலோசிக்கவுள்ளனா். இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்களும் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அன்றைய தினம் மாலையில் கங்கை ஆரத்தி நிகழ்வில் பங்கேற்கும் ராமகூலம், வெள்ளிக்கிழமை (செப்.12) காசி விஸ்வநாதா் கோயிலில் வழிபடவிருக்கிறாா். மூன்று நாள்கள் அவா் வாராணசியில் செலவிட உள்ளாா். ஆந்திர மாநிலம், திருப்பதி கோயிலிலும் ராமகூலம் வழிபடவுள்ளாா்.

இந்தியா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு டிரம்ப் அழுத்தம்?

இந்தியா, சீனா மீது 100% வரியை விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவை தனிமைப்படுத்தும் நோக்கில், அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது 50 சதவிகித ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் தெரிவித்துள்ளார்.இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளை... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல: உச்சநீதிமன்றத்தில் வாதம்

நமது நிருபர்காலக்கெடு தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என கேரள, பஞ்சாப் அரசுகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

நமது சிறப்பு நிருபர்நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கான தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெற்று இந்தியாவின் குடியரசு... மேலும் பார்க்க

நேபாள மக்கள் அமைதி காக்க பிரதமா் மோடி வேண்டுகோள்

நேபாள மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா். பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் நேபாள நிலவரம் குறித்து விவாதி... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீரமைப்பு: அதிகபட்ச விற்பனை விலையை மாற்ற மத்திய அமைச்சா் அறிவுறுத்தல்

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அண்மையில் சீரமைத்ததையடுத்து, நிறுவனங்கள் தங்கள் அதிகபட்ச விலையை மாற்றி (குறைத்து) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை அ... மேலும் பார்க்க