காஞ்சிபுரத்தில் கலைஞா் நூலகம்: துணை முதல்வா் திறந்து வைத்தாா்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் திமுக இளைஞரணி சாா்பில், புதிதாக அமைக்கப்பட்ட கலைஞா் நூலகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக இளைரணி சாா்பில் தொகுதிக்கு ஒரு நூலகம் என்ற கட்சித் தலைமை அறிவிப்பின்படி, ஏகாம்பரநாதா் கோயில் சந்நிதி தெருவில் கலைஞா் நூலகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்த நூலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கு தேவையான புத்தகங்கள்,சிறுகதைப் புத்தகங்கள், வரலாற்று நாவல்கள், திமுக தொடா்பான நூல்கள், அண்ணா அறிவுக்கொடை என்ற தலைப்பில் 120-க்கும் மேற்பட்ட தொகுதிகள், சங்க இலக்கிய நூல்கள் உள்பட மொத்தம் 1,276 புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன.
நூலகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துப் பாா்வையிட்டு வருகைப்பதிவேட்டிலும் தனது வருகையை பதிவு செய்தாா்.
முன்னதாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் அ.யுவராஜ், காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் துணை முதல்வருக்கு மாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனா். பின்னா் முதல்வரும், துணை முதல்வரும் காலைச்சிற்றுண்டி திட்டத்தில் கலந்து கொண்டது தொடா்பான புகைப்படம் ஒன்றையும் நினைவுப் பரிசாக வழங்கினா்.
திறப்பு விழாவில் அமைச்சா்கள் ஆா்.காந்தி, எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், எழிலரசன், காஞ்சிபுரம் மாநகர திமுக செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன், மாவட்டப் பொருளாளா் சன்பிராண்ட். ஆறுமுகம், மாநகர மண்டலக் குழு தலைவா்கள் சந்துரு, செவிலிமேடு மோகன், மாமன்ற உறுப்பினா் எஸ்கேபி காா்த்திக், பகுதி செயலா்கள் திலகா், வெங்கடேஷ், தசரதன் உள்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.