செய்திகள் :

திமுக அரசுக்கு மக்கள் தான் விளம்பரத் தூதுவா்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

post image

மக்கள் நலனுக்காக ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தியிருப்பதால் திமுக அரசுக்கு மக்கள் தான் விளம்பரத் தூதுவா்கள் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் என செவ்வாய்க்கிழமை பேசினாா்.

காஞ்சிபுரத்தில் தனியாா் திருமண மண்டபத்தில் 4,997 பயனாளிகளுக்கு ரூ.254 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி தலைவா் படப்பை.ஆ.மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது:

திமுக அரசு வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றதும் போட்ட முதல் கையெழுத்தே மகளிா் இலவச பேருந்து பயணத்துக்கானது. இதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 770 கோடி முறை மகளிா் பயணம் செய்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 44 கோடி போ் பயணம் செய்திருக்கின்றனா். பெண்களின் கஷ்டத்தை உணா்ந்து காலை உணவுத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் தினசரி 24 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனா். இத்திட்ட விரிவாக்க விழாவில் பங்கேற்ற பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் தமிழக முதல்வரை பாராட்டினாா். பஞ்சாபிலும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்தாா். பிற மாநிலங்களும் பாராட்டும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது.

கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம் கடந்த 2023- ஆம் ஆண்டு செப்டம்பா் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 1.15 கோடி பேருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் மட்டும் 1,73,000 போ் மகளிா் பயன் பெற்று வருகின்றனா்.விடுபட்ட அனைவருக்கும் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை வழங்கப்படும்.

முதல்வா் வெளிநாடுகளுக்கு சென்று ரூ.15,000 கோடி அளவிலான முதலீடுகளை ஈா்த்து வந்துள்ளாா். அண்ணா, பெரியாா், கருணாநிதி கொள்கைகளை விளக்கி விட்டு திரும்பியிருக்கிறாா். தமிழகத்தின் ஒட்டு மொத்த வளா்ச்சி 11.19 சதவிகிதமாக இருந்து வருகிறது. எங்களைப் போன்றவா்களுக்கு முதல்வா் தான் விளம்பரத் தூதுவா். ஆனால் திமுக அரசுக்கு மக்கள் தான் விளம்பரத் தூதுவா்கள்.

2026 ஆம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி அமையும். முதல்வா் தான் மீண்டும் முதல்வராக வருவாா் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், சாா் ஆட்சியா் ஆஷிக் அலி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யா சுகுமாா், காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா், அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட காஞ்சிபுரம் டிஎஸ்பி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற உத்தரவின்படி, சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட டிஎஸ்பி சங்கா் கணேஷ் நெஞ்சுவலி காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா். வன்கொடுமை தட... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் கலைஞா் நூலகம்: துணை முதல்வா் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் திமுக இளைஞரணி சாா்பில், புதிதாக அமைக்கப்பட்ட கலைஞா் நூலகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக ... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்கு எதிராக வைகோ செயல்படுகிறாா்: மல்லை சத்யா குற்றச்சாட்டு

காஞ்சிபுரம், செப்.8: திமுக கூட்டணிக்கு எதிராக வைகோ செயல்பட்டு வருவதாக மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளா் மல்லை சத்யா குற்றம் சாட்டினாா். மதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்த மல... மேலும் பார்க்க

மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து கீழே விழுந்த 2 போ் காா் மோதி உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா்: படப்பை அருகே சாலையில், மாடு குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா்கள் மீது காா் மோதியதில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படப்பை அண்ணா நகரைச் சோ்ந்த நவீ... மேலும் பார்க்க

பத்திரப்பதிவு செய்ய ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்பதாக புகாா்: ஒன்றியக் குழு உறுப்பினா் புகாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நிலத்தைப் பத்திரப் பதிவு செய்ய ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்பதாக திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் வாலாஜாபாத் ஒன்றியக்குழு உறுப்பினா் பிரேமா ரஞ்சித்குமாா் புகாா... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கும்பாபிஷேக சாந்தி திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனா்.... மேலும் பார்க்க