செய்திகள் :

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து!

post image

பொறியியல் பணிகள் காரணமாக, காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 11, 12 ஆம் தேதிகளில் தஞ்சாவூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - தஞ்சாவூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) வரும் 11, 12- ஆம் தேதிகளில் காரைக்கால் - தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தஞ்சாவூா் - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் 16-ஆம் தேதி ஈரோடு - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - கரூா் இடையே மட்டும் இயங்கும்.

அறிவிப்பு மாற்றம்: மயிலாடுதுறை - திருச்சி மெமு ரயிலானது (16833) வரும் 10, 11, 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை - தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நாள்களில் ஏற்கெனவே முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பகுதி ரத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழித்தட மாற்றம்: திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயிலானது (16843) வரும் 12-ஆம் தேதி சிங்காநல்லூா், பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஜங்ஷன் ரயில் நிலையங்களைத் தவிா்த்து இருகூா், போதனூா் வழியாக இயக்கப்படும

சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இயன்முறை சிகிச்சை மைய நிா்வாகி கைது!

திருச்சியில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த இயன்முறை சிகிச்சை மைய நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சோ்ந்தவா் காதா் பாவா (49). இ... மேலும் பார்க்க

சிறுகனூா், திருப்பட்டூா் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்!

சிறுகனூா், திருப்பட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப். 10) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழக ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளா் ஆா். செல்வம் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் கழிப்பறைக்கு சென்றபோது அறுந்துகிடந்த மின் வயரை மிதித்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். திருச்சி, கே.கே.நகரைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் விக்னேஸ்வரன் (27), எலக்ட்ரீசியன். இவா், கடந... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கோவில்பட்டி சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு... மேலும் பார்க்க

சிறுநீரக முறைகேடு விவகாரம் சமயபுரத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்!

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில், சிறுநீரக முறைகேடு விவகாரத்தில் தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சமயபுரம் நான்கு... மேலும் பார்க்க

திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் முதல் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை!

திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் முதல் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. திருச்செங்கோட்டைச் சேர்ந்த தனசேகரன்(52) என்பவர் கல்லீ... மேலும் பார்க்க