செய்திகள் :

திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் முதல் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை!

post image

திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் முதல் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

திருச்செங்கோட்டைச் சேர்ந்த தனசேகரன்(52) என்பவர் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக கடந்த 26.8.2025 அன்று திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் ஆர். சிவகுமார் ஆலோசனையின் பேரில் மருத்துவக் குழுவான டாக்டர் ரஜினிகாந்த் பாட்ஷா, டாக்டர் ஜாய் வர்கீஸ், மயக்கவியல் நிபுணர் டாக்டர் விஜய் கண்ணா மற்றும் மருத்துவ பணியாளர்கள் இணைந்து கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

மேற்கூறிய அறுவைச் சிகிச்சைக்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர் கோபக்குமார் கர்தா மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எடுகொண்டலு ஆகியோர் துணை புரிந்தனர்.

வெற்றிகரமான கண்காணிப்பைத் தொடர்ந்து நோயாளி தனசேகரன் கடந்த 5.9.2025 அன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

தமிழக அரசிடம் முறையான அனுமதி பெற்று. வெற்றிகரமாக மிக அரிய அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டதற்கு திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவக் குழுவினர் அனைவருக்கும் பல தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

First successful liver transplant surgery at SRM Medical College Hospital and Research Centre, Trichy

சிறுகனூா், திருப்பட்டூா் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்!

சிறுகனூா், திருப்பட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப். 10) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழக ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளா் ஆா். செல்வம் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் கழிப்பறைக்கு சென்றபோது அறுந்துகிடந்த மின் வயரை மிதித்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். திருச்சி, கே.கே.நகரைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் விக்னேஸ்வரன் (27), எலக்ட்ரீசியன். இவா், கடந... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கோவில்பட்டி சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு... மேலும் பார்க்க

சிறுநீரக முறைகேடு விவகாரம் சமயபுரத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்!

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில், சிறுநீரக முறைகேடு விவகாரத்தில் தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சமயபுரம் நான்கு... மேலும் பார்க்க

தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் உள்பட 6 போ் மீது வழக்கு

திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் உள்பட 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் செப்டம்பா் 13-ஆம் தேதி தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரச... மேலும் பார்க்க

வேன் ஓட்டுநருக்கு கத்திக் குத்து: 7 போ் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் வேன் ஓட்டுநரைக் கத்தியால் குத்திய சம்பவத்தில் 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி புத்தூா் சீனிவாசபுரத்தைச் சோ்ந்தவா் சீனிவாசபாபு (30), வேன் ஓட்டுநா். இவருக்கும், அதே ... மேலும் பார்க்க