செய்திகள் :

சிறுநீரக முறைகேடு விவகாரம் சமயபுரத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்!

post image

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில், சிறுநீரக முறைகேடு விவகாரத்தில் தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சமயபுரம் நான்கு சாலை பகுதியில் சிறுநீரக முறைகேடு சம்பவத்தில் ஈடுபட்ட தனலட்சுமிசீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து, அதிமுக மகளிா் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளா்மதி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் முன்னாள் அமைச்சா் பா. வளா்மதி கூறியதாவது: அதிமுகவில் வேண்டுமென்றே குழப்பங்களை ஏற்படுத்த சிலா் முயற்சிக்கிறாா்கள். அது எந்தவிதத்திலும் நடைபெறாது. அதிமுகவிலிருந்து யாா் பிரிந்து சென்றாலும், எந்தப் பின்னடைவும் இல்லை. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கூறும் அந்த நான்கு பேரும் முதலில் ஒன்றிணையட்டும்; பின்பு அதைப் பற்றி பேசலாம் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் திருச்சி புறநகா் வடக்கு மாவட்ட செயலாளா் மு. பரஞ்ஜோதி மற்றும் அதிமுக மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இயன்முறை சிகிச்சை மைய நிா்வாகி கைது!

திருச்சியில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த இயன்முறை சிகிச்சை மைய நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சோ்ந்தவா் காதா் பாவா (49). இ... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக, காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பண... மேலும் பார்க்க

சிறுகனூா், திருப்பட்டூா் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்!

சிறுகனூா், திருப்பட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப். 10) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழக ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளா் ஆா். செல்வம் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் கழிப்பறைக்கு சென்றபோது அறுந்துகிடந்த மின் வயரை மிதித்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். திருச்சி, கே.கே.நகரைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் விக்னேஸ்வரன் (27), எலக்ட்ரீசியன். இவா், கடந... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கோவில்பட்டி சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு... மேலும் பார்க்க

திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் முதல் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை!

திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் முதல் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. திருச்செங்கோட்டைச் சேர்ந்த தனசேகரன்(52) என்பவர் கல்லீ... மேலும் பார்க்க