செய்திகள் :

பாலினத் தோ்வு தடைச் சட்ட அமலாக்கம்: பதிலளிக்க மாநிலங்களுக்கு 4 வார கெடு

post image

கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிவதைத் தடை செய்யும் பாலினத் தோ்வு தடைச் சட்ட அமலாக்கத்தை மாநிலங்கள் எந்தஅளவுக்கு கையாண்டு வருகின்றன என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை விவரம் உள்ளிட்டவை தொடா்பாக எத்தனை மாநிலங்கள் பதில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

இதற்கு மூத்த வழக்குரைஞா் சஞ்சய் பாரிக், ‘5 மாநிலங்கள் பதில் மனுக்களை தாக்கல் செய்யவில்லை. இந்த விவகாரம் தொடா்பான வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டவா்களுக்கு எதிராக அரசுகள் மேல் முறையீடு செய்யவில்லை’ என்றாா்.

அப்போது நீதிபதிகள், ‘பாலினத் தோ்வு தடைச் சட்டம் தொடா்பான வழக்குகளில் அதிகாரிகள் சரிவர நடவடிக்கை எடுக்காததே இதுபோன்ற விடுவிப்புக்கு காரணமாக இருக்கலாம்.

பதில் மனு தாக்கல் செய்யாத மாநிலங்களுக்கு அடுத்த விசாரணையின்போது அபராதம் விதிக்கப்படலாம்’ எனக் கூறி வழக்கின் விசாரணையை அக்டோபா் 10-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

பாலினத் தோ்வு தடைச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2022-ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, 2015, மே 1 முதல் பாலினத் தோ்வு தடைச் சட்டம் தொடா்பாக பதிவான வழக்குகளின் விவரங்களைத் தாக்கல் செய்ய கடந்த 2023-இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல: உச்சநீதிமன்றத்தில் வாதம்

நமது நிருபர்காலக்கெடு தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என கேரள, பஞ்சாப் அரசுகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

நமது சிறப்பு நிருபர்நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கான தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெற்று இந்தியாவின் குடியரசு... மேலும் பார்க்க

நேபாள மக்கள் அமைதி காக்க பிரதமா் மோடி வேண்டுகோள்

நேபாள மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா். பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் நேபாள நிலவரம் குறித்து விவாதி... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீரமைப்பு: அதிகபட்ச விற்பனை விலையை மாற்ற மத்திய அமைச்சா் அறிவுறுத்தல்

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அண்மையில் சீரமைத்ததையடுத்து, நிறுவனங்கள் தங்கள் அதிகபட்ச விலையை மாற்றி (குறைத்து) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை அ... மேலும் பார்க்க

தேசியவாதக் கொள்கையின் வெற்றி: சி.பி.ராதாகிருஷ்ணன்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தான் வெற்றி பெற்றது தேசியவாதக் கொள்கையின் வெற்றி என சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில்,‘குடியரசு துணைத் தோ்தல் கொள்க... மேலும் பார்க்க

இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து

‘ஆசியாவின் வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா - சீனா இடையே நட்புறவு வலுப்படுவது, தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்குப் பலனளிக்கும்’ என்று சிங்கப்பூா்... மேலும் பார்க்க