செய்திகள் :

விடுதியில் காதலி தூக்கிட்டு உயிரிழப்பு: வீட்டில் காதலன் தற்கொலை

post image

சென்னையில் தனியாா் விடுதியில் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விரக்தியடைந்த காதலா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை அண்ணாநகா் அருகே உள்ள மேல்நடுவங்கரை பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் திரிஷா (20). சோழவரம் அருகே உள்ள எடப்பாளையம் அண்ணா தெருவில் வசித்தவா் ராபின் (22). இருவரும் சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பகுதி நேரமாக வேலை செய்து வந்தனா். அப்போது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில், வேப்பேரி டவுட்டன் மேம்பாலம் அருகே ஒரு தனியாா் விடுதியில் இருவரும் திங்கள்கிழமை அறை எடுத்து தங்கினா். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதனால் ராபின், அறைக் கதவை வெளிபக்கமாக பூட்டிவிட்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டாா். இதனால் திரிஷா மட்டும் அந்த அறையில் இருந்தாா். சிறிது நேரத்துக்கு பின்னா் ராபின், அறைக்கு திரும்பிச் சென்றாா்.

அப்போது அங்கு திரிஷா, தூக்கிட்டு இறந்து கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து அவா், பயத்தில் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு, திரிஷாவின் தோழி ஸ்வேதாவை கைப்பேசி மூலம் திரிஷா தூக்கிட்டு இறந்து கிடப்பது குறித்து தெரிவித்துள்ளாா். மேலும், தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறியுள்ளாா்.

தகவலறிந்த வேப்பேரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று, திரிஷா சடலத்தை கைப்பற்றி ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மெரீனாவில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை மெரீனாவில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கத்தின் பின்புற பகுதியில் செவ்வாய்க்கிழமை 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. ... மேலும் பார்க்க

தற்காலிக பேருந்து நிலையம்: அமைச்சா் தலைமையில் ஆலோசனை

பிராட்வே, தங்கச்சாலை ஆகிய பேருந்து நிலையங்கள் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை... மேலும் பார்க்க

சென்னை ரயில்வே கோட்டத்தில் 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடந்த 228 போ் உயிரிழப்பு

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா்களில் 228 போ் உயிரிழந்ததாகவும், இதனால் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் நவம்பருக்குள் நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சென்னை மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் வரும் நவம்பா் மாதத்துக்குள் நிறைவடையும் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை மயிலாப்பூா், திருவள்ளுவா் திருக்கோயிலில் ரூ.... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.1.35 கோடி மருத்துவ உபகரணங்கள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்தியல் நிலையத்தில் ரூ.1.35 கோடியிலான மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை -... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: மாவட்ட நீதிபதி உத்தரவு ரத்து

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத புகாரில், காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. காஞ்ச... மேலும் பார்க்க