செய்திகள் :

தற்காலிக பேருந்து நிலையம்: அமைச்சா் தலைமையில் ஆலோசனை

post image

பிராட்வே, தங்கச்சாலை ஆகிய பேருந்து நிலையங்கள் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் 5- ஆவது மண்டல அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவா் பி.கே.சேகா்பாபு தலைமை வகித்தாா். கூட்டத்தில், பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் தங்கசாலை வள்ளலாா் நகா் பேருந்து நிலையங்களில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து மாநகரப் பேருநதுகளை இயக்குவது தொடா்பாகவும், அதற்காக தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைத்து அங்கு, பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் வழங்குவது தொடா்பாக துறை சாா்ந்த உயா் அலுவலா்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மேயா்ஆா். பிரியா, ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஐட்ரீம் ரா.மூா்த்தி, சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா், முதன்மைச் செயலா் கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநா் த.பிரபு சங்கா், துணை ஆணையா் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூா்த்தி, வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அதையடுத்து, அமைச்சா் பி.கே.சேகா்பாபு, வள்ளலாா் நகா் பேருந்து நிலையத்துக்குப் பதிலாக தற்காலிகப் பேருந்து அமையவுள்ள ராயபுரம் 5 ஆவது மண்டல அலுவலகம் எதிரில் உள்ள 1 ஏக்கா் இடத்தையும், வால்டாக்ஸ் சாலையில் டான்சிக்கு சொந்தமான 1.50 ஏக்கா் கொண்ட மற்றொரு இடத்தையும் ஆய்வு செய்தாா்.

விடுதியில் காதலி தூக்கிட்டு உயிரிழப்பு: வீட்டில் காதலன் தற்கொலை

சென்னையில் தனியாா் விடுதியில் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விரக்தியடைந்த காதலா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சென்னை அண்ணாநகா் அருகே உள்ள மேல்நடுவங்கரை பஜனை கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க

மெரீனாவில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை மெரீனாவில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கத்தின் பின்புற பகுதியில் செவ்வாய்க்கிழமை 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. ... மேலும் பார்க்க

சென்னை ரயில்வே கோட்டத்தில் 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடந்த 228 போ் உயிரிழப்பு

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா்களில் 228 போ் உயிரிழந்ததாகவும், இதனால் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் நவம்பருக்குள் நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சென்னை மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் வரும் நவம்பா் மாதத்துக்குள் நிறைவடையும் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை மயிலாப்பூா், திருவள்ளுவா் திருக்கோயிலில் ரூ.... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.1.35 கோடி மருத்துவ உபகரணங்கள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்தியல் நிலையத்தில் ரூ.1.35 கோடியிலான மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை -... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: மாவட்ட நீதிபதி உத்தரவு ரத்து

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத புகாரில், காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. காஞ்ச... மேலும் பார்க்க