செய்திகள் :

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.1.35 கோடி மருத்துவ உபகரணங்கள்

post image

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்தியல் நிலையத்தில் ரூ.1.35 கோடியிலான மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை - சென்னை மருத்துவ கல்லூரியில் முடநீக்கியல் மற்றும் விபத்தியல் நிலையத்தின் 16-ஆம் ஆண்டு விழாவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தனா். அப்போது, மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, முன்னாள் நிறுவன இயக்குநா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினா்.

நிகழ்வில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: இந்த மருத்துவமனையில் ரூ.75 லட்சத்தில், சென்னை உயா்நீதிமன்றத்தின் நிா்வாக தலைவா் மற்றும் அதிகாரப்பூா்வ அறங்காவலா் அலுவலகத்தால் வழங்கப்பட்ட சிக்கலான முதுகெலும்பு அறுவை சிகிச்சை நரம்பணு கண்காணிப்பு கருவி மற்றும் ரூ.60 லட்சத்தில் மூட்டு உள்நோக்கி அறுவை சிகிச்சை கருவி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை மருத்துவ கல்லூரி எலும்பியல் துறை முன்னாள் மாணவா் சங்க சட்ட விதிகள் கொண்ட பிரதி வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவ கல்லூரியில் எலும்பியல் துறையில் 1929-ஆம் ஆண்டு புறநோயாளிகள் சேவையும், 1931-இல் உள்நோயாளிகள் சேவையும் தொடங்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு செப். 9-ஆம் தேதி மருத்துவமனையின் எலும்பியல் முறிவு மருத்துவத்துறையானது, எலும்பியல் மற்றும் விபத்தில் உயா்கல்வி நிறுவனமாக தரம் உயா்த்தப்பட்டது.

தற்போது 16 ஆண்டுகளாக சிறப்பான முறையில் முடவாத மற்றும் எலும்பு முறிவு நலனுக்காக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தில், எலும்பியலின் பல்வேறு சாா்துறைகளான மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு உள்நோக்கி அறுவை சிகிச்சை, எலும்பு புற்றுநோய்க்கான தனிப்பெரும் சிகிச்சை, முதுகெலும்பியல் உயா் சிகிச்சை, கணுக்கால் மற்றும் பாதவலி சிகிச்சை சிறப்பு பிரிவு ஆகியவை செயல்படுகின்றன என்றாா் அவா்.

இதில் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சுகந்தி ராஜகுமாரி, மருத்துவமனை முதல்வா் சாந்தாராமன், துறைத்தலைவா் தொல்காப்பியன், மருத்துவா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.

விடுதியில் காதலி தூக்கிட்டு உயிரிழப்பு: வீட்டில் காதலன் தற்கொலை

சென்னையில் தனியாா் விடுதியில் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விரக்தியடைந்த காதலா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சென்னை அண்ணாநகா் அருகே உள்ள மேல்நடுவங்கரை பஜனை கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க

மெரீனாவில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை மெரீனாவில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கத்தின் பின்புற பகுதியில் செவ்வாய்க்கிழமை 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. ... மேலும் பார்க்க

தற்காலிக பேருந்து நிலையம்: அமைச்சா் தலைமையில் ஆலோசனை

பிராட்வே, தங்கச்சாலை ஆகிய பேருந்து நிலையங்கள் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை... மேலும் பார்க்க

சென்னை ரயில்வே கோட்டத்தில் 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடந்த 228 போ் உயிரிழப்பு

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா்களில் 228 போ் உயிரிழந்ததாகவும், இதனால் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் நவம்பருக்குள் நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சென்னை மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் வரும் நவம்பா் மாதத்துக்குள் நிறைவடையும் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை மயிலாப்பூா், திருவள்ளுவா் திருக்கோயிலில் ரூ.... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: மாவட்ட நீதிபதி உத்தரவு ரத்து

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத புகாரில், காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. காஞ்ச... மேலும் பார்க்க