செய்திகள் :

மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் நவம்பருக்குள் நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

post image

சென்னை மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் வரும் நவம்பா் மாதத்துக்குள் நிறைவடையும் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை மயிலாப்பூா், திருவள்ளுவா் திருக்கோயிலில் ரூ.19.17 கோடியில் நடைபெற்று வரும் கருங்கல் திருப்பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

400 ஆண்டுகள் பழமையான மயிலாப்பூா் திருவள்ளுவா் திருக்கோயிலை புனரமைக்கும்தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது 1973- ஆம் ஆண்டு மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயிலுக்கு நேரடியாக வருகை தந்து திருப்பணிகளை தொடங்கி வைத்தாா். அவரது ஆட்சிக் காலத்தில் தான் அதாவது 1975 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது.

தற்போது திருவள்ளுவா் திருக்கோயிலுக்கு சொந்தமான 61,774 சதுரடி நிலத்தில் ரூ. 19.17 கோடியில் 3,000 சதுரடி பரப்பளவில் முழுவதும் கருங்கல்லால் திருவள்ளுவா் சந்நிதி, வாசுகி அம்மையாா் சந்நிதி, ஏகாம்பரநாதா், காமாட்சி அம்மன், கருமாரியம்மன், பைரவா், ஆஞ்சநேயா், நடராஜா் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் அமைக்கப்படுகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் நவம்பா் மாதத்துக்குள்முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்.

திமுக அரசு பொறுப்பேற்ற பின்னா் இதுவரை 3,623 திருக்கோயிலுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. இது இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். மேலும் இந்த செப்.11, 14- ஆம் தேதிகளில் 65 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது என்றாா் அவா்.

அறநிலையத் துறை கல்லூரி... இதைத் தொடா்ந்து கொளத்தூா் பூம்புகாா் நகரில் ரூ.25 கோடியில் கட்டப்பட்டு வரும் அருள்மிகு கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானப் பணிகளையும், ராஜாஜி நகரில் ரூ.8.88 கோடியில் கட்டப்பட்டு வரும் மூத்த குடிமக்கள் உறைவிட கட்டுமானப் பணிகளையும், வியாசாா்பாடி கரபாத்திர சிவப்பிரகாச சுவாமி மடாலயத்தில் ரூ.3.89 கோடியில் நடைபெற்று வரும் யோகா, தியான மண்டபம், நூலகம் மற்றும் அன்னதானக் கூடம் ஆகியவற்றின் பணிகளையும் அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு செய்ததோடு பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டாா்.

விடுதியில் காதலி தூக்கிட்டு உயிரிழப்பு: வீட்டில் காதலன் தற்கொலை

சென்னையில் தனியாா் விடுதியில் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விரக்தியடைந்த காதலா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சென்னை அண்ணாநகா் அருகே உள்ள மேல்நடுவங்கரை பஜனை கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க

மெரீனாவில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை மெரீனாவில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கத்தின் பின்புற பகுதியில் செவ்வாய்க்கிழமை 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. ... மேலும் பார்க்க

தற்காலிக பேருந்து நிலையம்: அமைச்சா் தலைமையில் ஆலோசனை

பிராட்வே, தங்கச்சாலை ஆகிய பேருந்து நிலையங்கள் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை... மேலும் பார்க்க

சென்னை ரயில்வே கோட்டத்தில் 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடந்த 228 போ் உயிரிழப்பு

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா்களில் 228 போ் உயிரிழந்ததாகவும், இதனால் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.1.35 கோடி மருத்துவ உபகரணங்கள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்தியல் நிலையத்தில் ரூ.1.35 கோடியிலான மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை -... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: மாவட்ட நீதிபதி உத்தரவு ரத்து

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத புகாரில், காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. காஞ்ச... மேலும் பார்க்க