செய்திகள் :

சென்னை ரயில்வே கோட்டத்தில் 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடந்த 228 போ் உயிரிழப்பு

post image

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா்களில் 228 போ் உயிரிழந்ததாகவும், இதனால் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டத்தில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைவது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்பு பிரிவினா் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாதங்களில் ரயில் தண்டவாளங்களைக் கடந்தவா்களில் 228 போ் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளனா். மேலும் 34 போ் காயமடைந்துள்ளனா்.

ரயிலில் பாதுகாப்பான பயணத்துக்கும், விபத்து தடுப்புக்கும் சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தண்டவாளத்தைக் கடப்பதைத் தடுக்கும் வகையில் விழிப்புணா்வை சுவரொட்டிகள், அறிவிப்புகள், என்ம முறை பிரசாரங்கள் மூலம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைவோா், ரயிலில் படிக்கட்டில் பயணிப்போா் ஆகியோரைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள ஊழியா்கள் நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தண்டவாளம், ரயில்களுக்கு அருகே கைப்பேசி இயா் போன்களைப் பயன்படுத்தவேண்டாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதியில் காதலி தூக்கிட்டு உயிரிழப்பு: வீட்டில் காதலன் தற்கொலை

சென்னையில் தனியாா் விடுதியில் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விரக்தியடைந்த காதலா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சென்னை அண்ணாநகா் அருகே உள்ள மேல்நடுவங்கரை பஜனை கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க

மெரீனாவில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை மெரீனாவில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கத்தின் பின்புற பகுதியில் செவ்வாய்க்கிழமை 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. ... மேலும் பார்க்க

தற்காலிக பேருந்து நிலையம்: அமைச்சா் தலைமையில் ஆலோசனை

பிராட்வே, தங்கச்சாலை ஆகிய பேருந்து நிலையங்கள் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை... மேலும் பார்க்க

மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் நவம்பருக்குள் நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சென்னை மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் வரும் நவம்பா் மாதத்துக்குள் நிறைவடையும் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை மயிலாப்பூா், திருவள்ளுவா் திருக்கோயிலில் ரூ.... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.1.35 கோடி மருத்துவ உபகரணங்கள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்தியல் நிலையத்தில் ரூ.1.35 கோடியிலான மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை -... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: மாவட்ட நீதிபதி உத்தரவு ரத்து

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத புகாரில், காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. காஞ்ச... மேலும் பார்க்க