செய்திகள் :

பாமக பெயர், சின்னம் விவகாரம்: நீதிமன்றத்தில் ராமதாஸ் கேவியட் மனுக்கள் தாக்கல்!

post image

பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தின் உரிமை தொடர்பாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான கேவியட் மனுக்கள், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவற்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணிக்கு இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகின்றது. இருவரும் மாறிமாறி ஊடகங்கள் மற்றும் கூட்டங்கள் வாயிலாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

கட்சியின் நிறுவனரான தானே தலைவராக செயல்படப் போவதாக ராமதாஸும், பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தானே தலைவராக தொடர்வதாக அன்புமணியும் அறிவித்துள்ளனர்.

மேலும், கட்சியின் பழைய நிர்வாகிகளை நீக்கி, புதிய நிர்வாகிகளை இருவரும் நியமித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

இதனிடையே, இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பாமகவின் கூட்டணியையும் வேட்பாளர்களையும் யார் அறிவிப்பது போன்ற பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், கட்சிப் பெயர் மற்றும் சின்னத்தின் உரிமை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில், ராமதாஸ் நியமித்த கட்சியின் பொதுச் செயலாளர் முரளி சங்கர் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி தாரப்பினர் கட்சியின் பெயருக்கோ, மாம்பழம் சின்னத்துக்கோ உரிமை கோரினால், தங்கள் தரப்பை கேட்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Caveat petitions have been filed by the PMK's founder Ramadoss, regarding the ownership of the name and symbol of the Party.

இதையும் படிக்க : நேபாளத்தில் ராணுவ ஆட்சி!

குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு

கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார். சுத்தியல் கீழே விழுந்ததில் பாலத்தில் சிறு கீறல் ஏற்பட்டதாகவும் அது தற்போது சரிசெய்யப்பட்... மேலும் பார்க்க

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி தர மறுப்பு! இரு ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி தர மறுத்த விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.கோவையில் காளிதாஸ் என்பவர், தனது 84 வயதான தந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ள அரசு மருத்துவக் க... மேலும் பார்க்க

கட்சி இணைந்தால் இபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா? - ஓபிஎஸ் பதில்

கட்சியை ஒன்றிணைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெறும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்... மேலும் பார்க்க

சேலத்தில் குழந்தை கடத்தல்! கிடைத்த ஒரே துப்பு; நாமக்கல்லில் மீட்பு!

சேலம்: சேலத்தில் காவல் நிலையம் அருகே கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் பத்திரமாக மீட்கப்பட்டது. சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்தவர் மதுரை. இவர் தனது மனைவி பிரியா மற்றும் 9 மாத பெண் குழ... மேலும் பார்க்க

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு அரசுப் பள்ளிகள் பலிகடா! - அண்ணாமலை

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "திருச்சி ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த அரசுப் பள்ளிக்கு விடுமுறை! அண்ணாமலை கண்டனம்!

திருச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில்.திருச்சி மாவட்டம், உப்பிலி... மேலும் பார்க்க