செய்திகள் :

ரூ.1.2 கோடி ஒதுக்கியும் 9 மாதங்களாக கிடப்பில் நூம்பல் சாலைப் பணிகள்

post image

ரூ.1.2 கோடி ஒதுக்கியும் 9 மாதங்களாக கிடப்பில் நூம்பல் சாலைப் பணிகள்

ஆவடி, செப். 9: திருவேற்காடு - நூம்பல் சாலையை சீரமைக்க ரூ.1.20 கோடி ஒதுக்கி செய்து 9 மாதங்களாகியும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட வேலப்பன்சாவடியில் இருந்து நூம்பல் பிரதானச் சாலை சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். நூம்பல் பகுதியில் அமைந்துள்ள பல்வேறு தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இருந்து சென்னை துறைமுகம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் மூலம் இயந்திரங்கள், உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

மேலும், துறைமுகத்தில் இருந்து கொண்டு வரப்படும் ராட்சத இயந்திரங்கள், கிரானைட் கற்கள் இந்த பகுதியில் உள்ள கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதனால் இந்த பகுதியில் கனரக வாகனங்களின் போக்குவரத்து பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்த சாலை வழியாக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, போரூர், ஐயப்பன்தாங்கல், மதுரவாயல், வானகரம், நூம்பல், துண்டலம், செட்டியார்அகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர்.

இந்த சாலை குண்டும், குழியுமாக கிடப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் இச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மான்யமாக ரூ.80 லட்சமும், பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.40 லட்சமும் ஆக மொத்தம் ரூ.1.20 கோடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன் பிறகு இச்சாலை சீரமைக்கப்படவில்லை. இந்த நிலையில் அவ்வப்போது பெய்யும் பலத்த மழையால் சாலை முழுவதும் மழை நீருடன் கழிவு நீர் தேங்கி நின்றது. மேலும் இந்த கழிவு நீர் அந்தப் பகுதியிலுள்ள தொழிற்சாலைகள், குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

இதனால் பொதுமக்கள், தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இச்சாலை பயன்படுத்த முடியால் பல கி.மீ தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது, திருவேற்காடு- நூம்பல் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கியும் பலனில்லை. தினமும் தொழிலாளர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டே சென்று வருகின்றனர்.

அடிக்கடி பெய்து வரும் மழையால் கழிவுநீரும் மழைநீரும் கலந்து வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் செல்லுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

780 கிலோ கஞ்சா தீவைத்து அழிப்பு

ஆவடி காவல் ஆணையரகப் பகுதியில் 89 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 780 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீஸார் செவ்வாய்க்கிழமை எரித்து அழித்தனர்.ஆவடி காவல் ஆணையரகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு... மேலும் பார்க்க

எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: திருவள்ளூா் ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் மாவட்டத்தில் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆட்சியா் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்து விரைவில் முடிக்கவும்... மேலும் பார்க்க

காரில் 359 கிலோ குட்கா கடத்தல்: 2 போ் கைது

திருவள்ளூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை காரில் கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து 359 கிலோ குட்கா, காரை பறிமுதல் செய்தனா். ஆந்திர மாநிலத்திலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள்... மேலும் பார்க்க

ஆவணங்கள் இன்றி பேருந்து கொண்டு சென்ற ரூ.1.25 கோடி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு சென்ற ரூ.1.25 கோடியை பறிமுதல் செய்த புலனாய்வு பிரிவு போலீஸாா் அத்தொகையை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனா். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 இளைஞா்கள் மரணம்

திருத்தணி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் 2 இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், 2 போ் பலத்த காயம் அடைந்தனா். ஆந்திர மாநிலம், நகரி அடுத்த தடுக்குப்பேட்டையை சோ்ந்த தினேஷ்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பெரியபாளையம்

மின்தடை பகுதிகள்: பெரியபாளையம், பண்டிக்காவனூா், பாலவாக்கம், தண்டலம், வெங்கல், கன்னிகைபோ், ஊத்துக்கோட்டை, சீத்தஞ்சேரி, மாளந்தூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். மேலும் பார்க்க