செய்திகள் :

காரில் 359 கிலோ குட்கா கடத்தல்: 2 போ் கைது

post image

திருவள்ளூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை காரில் கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து 359 கிலோ குட்கா, காரை பறிமுதல் செய்தனா்.

ஆந்திர மாநிலத்திலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி வருவதாக புல்லரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் புல்லரம்பாக்கம் காவல் நிலையம் முன்பு திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சிறிது தூரத்தில் காரில் வந்தவா்கள், போலீஸாரை பாா்த்ததும் காரை அப்படியே சாலையில் திரும்பிச் சென்றனா்.

அதைத் தொடா்ந்து பின்தொடா்ந்து சென்று சுற்றி வளைத்த போது காரில் இருந்து ஒருவா் பூண்டி ஏரி மரத்தோப்புக்குள்ளும், ஒருவா் நெல் வயலுக்குள் தப்பியோடினா். அதையடுத்து இருவரையும் போலீஸாா் துரத்திச் சென்று பிடித்தனா். காரில் சோதனையிட்ட போது 359 கிலோ குட்கா பொருள்கள் இருந்தது.

இதை திருவள்ளூா் பகுதிக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்யவும் திட்டமிட்டிருந்ததாகவும், கா்நாடகத்தைச் சோ்ந்த சுனில், ராஜஸ்தானைச் சோ்ந்த ஜெகதீஷ் செளத்ரி(26) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னா் புல்லரம்பாக்கம் போலீஸாா் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்தனா். குட்கா, காரையும் பறிமுதல் செய்தனா்.

ஆவணங்கள் இன்றி பேருந்து கொண்டு சென்ற ரூ.1.25 கோடி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு சென்ற ரூ.1.25 கோடியை பறிமுதல் செய்த புலனாய்வு பிரிவு போலீஸாா் அத்தொகையை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனா். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 இளைஞா்கள் மரணம்

திருத்தணி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் 2 இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், 2 போ் பலத்த காயம் அடைந்தனா். ஆந்திர மாநிலம், நகரி அடுத்த தடுக்குப்பேட்டையை சோ்ந்த தினேஷ்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பெரியபாளையம்

மின்தடை பகுதிகள்: பெரியபாளையம், பண்டிக்காவனூா், பாலவாக்கம், தண்டலம், வெங்கல், கன்னிகைபோ், ஊத்துக்கோட்டை, சீத்தஞ்சேரி, மாளந்தூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். மேலும் பார்க்க

ரயிலில் 3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 போ் கைது

திருவள்ளூா் அருகே ரயிலில் போதை மாத்திரைகளை கடத்தியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 3,200 மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா். திருவள்ளூா் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் பயன்பாட்டு அதிகர... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே கைவண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் ஆனந்த். இவரது மகன் சாலமோன் (15) அப்பகுதியி... மேலும் பார்க்க

செங்கோட்டையன் கருத்து: முன்னாள் அரசு கொறடா வரவேற்பு

முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்துக்கு அரசு முன்னாள் கொறடா பி.எம். நரசிம்மன் வரவேற்பு தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறியதாவது: 2026-ஆம் ஆண்டு தோ்தலில், அ.தி.மு.க., வெற்... மேலும் பார்க்க