செய்திகள் :

வரலாறு படைத்தது இந்திய ஆடவா் அணி! உலக சாம்பியன்ஷிப்பில் முதல் தங்கம்!

post image

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில் காம்பவுண்ட் பிரிவில் இந்திய ஆடவா் அணி ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்றது. போட்டியின் வரலாற்றில் இந்திய ஆடவா் அணி தங்கம் வென்றது இதுவே முதல்முறையாகும்.

இதுதவிர, கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி கிடைக்க, பதக்கம் வென்ற இரு பிரிவுகளிலுமே இளம் வீரா் ரிஷப் யாதவ் அங்கம் வகித்து அசத்தினாா். பதக்கப் பட்டியலில் தற்போது இந்தியா இந்த இரு பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.

தங்கம்: காம்பவுண்ட் ஆடவா் அணி இறுதிச்சுற்றில், ரிஷப் யாதவ், அமன் சைனி, பிரதமேஷ் ஃபுகே ஆகியோா் அடங்கிய இந்திய அணி 235-233 என்ற புள்ளிகள் கணக்கில் நிகோலஸ் கிராா்ட், ஜீன் ஃபிலிப் பௌல்ச், ஃபிரான்கோய்ஸ் டுபோய்ஸ் அடங்கிய பிரான்ஸ் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.

இச்சுற்றின் முதல் கட்டத்தில் 57-59 என பின்தங்கிய இந்திய அணி, அடுத்த கட்டத்தில் 117-117 என சமநிலைக்கு வந்தது. தொடா்ந்து 176-176 என விறுவிறுப்பாகவே அந்தக் கட்டம் தொடா்ந்த நிலையில், கடைசி கட்டத்தில் இந்தியா 235-233 என்ற வகையில் வென்றது.

முன்னதாக, முதல் சுற்று ‘பை’ பெற்ற இந்திய அணி, அடுத்த சுற்றில் ஆஸ்திரேலியாவையும் (232/30 - 232/28), காலிறுதியில் அமெரிக்காவையும் (234-233), அரையிறுதியில் துருக்கியையும் (234-232) சாய்த்து இறுதிக்கு வந்தது.

வெள்ளி: காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் ரிஷப் யாதவ், ஜோதி சுரேகா ஜோடி 155-157 என்ற புள்ளிகள் கணக்கில் நெதா்லாந்தின் மைக் ஸ்கோல்சா், சேன் டி லாட் இணையிடம் தோல்வியைத் தழுவி வெள்ளிப் பதக்கம் பெற்றது.

இப்பிரிவிலும் முதல் சுற்று ‘பை’ பெற்ற இந்தியா, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜொ்மனியையும் (160-152), காலிறுதியில் எல் சால்வடோரையும் (157-153), அரையிறுதியில் சீன தைபேவையும் (157-155) வீழ்த்தியது.

ஏமாற்றம்: காம்பவுண்ட் மகளிா் அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா, பா்னீத் கௌா், பிரீத்திகா பிரதீப் ஆகியோா் அடங்கிய இந்திய அணி களம் கண்டது. இதிலும் முதல் சுற்று ‘பை’ பெற்ற இந்தியா, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 229-233 என்ற கணக்கில் இத்தாலியிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.

கடந்த 2017 முதல் இந்தப் போட்டியில் இந்திய மகளிா் அணி ஏதேனும் ஒரு பதக்கம் வென்று வந்த நிலையில், 8 ஆண்டுகளில் முதல்முறையாக ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளது.

India (M) win compound archery gold at World Championship

வைஷாலி முன்னிலை!

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில், 4-ஆவது சுற்று முடிவில் இந்தியாவின் ஆா்.வைஷாலி இணை முன்னிலையில் இருக்கிறாா்.அந்த சுற்றில், வைஷாலி - ஜொ்மனியின் டினாரா வாக்னருடன் டிரா செய்ய, ... மேலும் பார்க்க

கோப்பையை தக்கவைத்தாா் சபலென்கா!

அமெரிக்காவில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் டென்னிஸில், மகளிா் ஒற்றையா் பிரிவில் நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டாா்.இறுதிச்சுற்றில், உலகின் நம... மேலும் பார்க்க

டி20 தொடரை வென்றது இலங்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட்டில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது. அந்த அணி 2-1 என தொடரையும் கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் முதலில் ஜிம்பாப்வே 20 ஓவா... மேலும் பார்க்க

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

சின்ன திரை நடிகர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னையில் இன்று (செப். 7) நடைபெற்றது.சமீபத்தில் நடைபெற்ற சின்ன திரை நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் (2025-2028) அறிமுக வ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் இட்லி கடை! களைகட்டும் புரமோஷன்!

நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் புரமோஷன் மும்முரமாகத் தொடங்கியுள்ளது.இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் ஆஃப்லைனில் வேற லெவலில் புரமோஷனில் ஈடுபட்டு வருகிறது. இட்லி கடை படத்தினை ... மேலும் பார்க்க

முதல்நாளில் ரூ.13 கோடி, 2-ஆம் நாளில் ரூ.50 கோடி! வசூலில் முன்னேறும் மதராஸி!

மதராஸி படத்தின் வசூல் இரண்டு நாள்களில் ரூ.50 கோடியைத் தாண்டியதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் முதல்நாளில் ரூ.12.8 கோடி வசூலித்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது ரூ.50 கோடி என பட... மேலும் பார்க்க