செய்திகள் :

Trump: ``ட்ரம்ப் தன் தவறை உணரத் தொடங்கியுள்ளார்'' - கே.பி. ஃபேபியனின் அனுபவப் பகிர்வு

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மீது விதித்த பெரும் வர்த்தக வரிகள் தொடர்பான கடுமையான நிலைப்பாட்டை கடந்த சில நாட்களாக மென்மையாக்கி வருவதாக முன்னாள் இந்திய தூதர் கே.பி. ஃபேபியன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதாகக் கூறி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூடுதலாக 25 சதவீதம் வரை வர்த்தக வரி விதித்தார்.

இதனால் மொத்த வர்த்தக வரி 50 சதவீதமாக உயர்ந்தது. அவரின் இந்த தீவிரமான வர்த்தக வரி உத்திகள் எதிர்பார்த்த முடிவுகளை அளிக்கவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

KP Fabian
KP Fabian

இந்த நிலையில்தான் இந்திய தூதர் கே.பி. ஃபேபியன் அவர்களின் கருத்துகள் வந்துள்ளன.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், ``அமெரிக்கா–இந்தியா உறவுகளை மிகச் சிறப்பான உறவாக அதிபர் ட்ரம்ப் வர்ணித்துள்ளார். பிரதமர் மோடியுடனான தனது தனிப்பட்ட நட்பையும் வலுப்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.

பிரதமர் மோடியும், இந்த உணர்வு பரஸ்பரம் வலிமையானது என பதிலளித்துள்ளார். ஆனால், இதிலிருந்து 'ட்ரிபிள் டி' என்று அழைக்கப்படும் - 'அடிப்படையற்ற ட்ரம்ப் வர்த்தக வரிகள்' - விரைவில் முடிவடையும் என்று உறுதியான முடிவுக்கு வர முடியாது.

அதே நேரத்தில், இந்தியா சரணடையும் என்ற அவரது அனுமானம் தவறானது என்பதை ட்ரம்ப் உணரத் தொடங்கியுள்ளார். இந்தியா ஒரு நாகரிக நாடு; அனைவருடனும் நட்பு பாராட்டவும், வணிகம் செய்யவும் விரும்புகிறது.

KP Fabian
KP Fabian

ஆனால் இந்தியா யாரிடமிருந்தும் கட்டளையை ஏற்க முடியாது. இப்போதுவரை வர்த்தக வரிகள் 50 சதவீதம் என்ற நிலைமையிலேயே தொடர்கின்றன.

அமெரிக்க நிறுவனங்கள் வேளாண்மை மற்றும் பிற முக்கிய துறைகளில் நுழைவது தொடர்பாக, இந்தியாவின் சிவப்பு கோடுகள் உள்ளதால் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ளன," என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``மதுரை விமான நிலைய பெயர்; மக்கள் நலனை மறந்து EPS பேசுகிறார்'' - கிருஷ்ணசாமி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்... மேலும் பார்க்க

``அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் ஆகலாம்; ஆனால்'' - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம், நிலகோட்டை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி தொகுதிகளில் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்தார் மக்கள... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின்: ``6 மாதத்தில் 10,000 முகாம்கள் இயலாத காரியம்'' -புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம்"நாளொன்றிற்கு 3000 மனுக்கள் பெறப்பட்டாலும் பெண் அலுவலர்கள் என்று கூட பாராமல் இரவு 12 மணி வரை மனுக்களை பதிவேற்றம் செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர்" என்ற... மேலும் பார்க்க

Laughter therapy: சிரிப்பு சிகிச்சை உண்மையிலேயே பயன் அளிக்குமா? நிபுணர் விளக்கம்!

சிரிக்காத நாள், நம் வாழ்நாளில் வீணான ஒரு நாள் என்று பலரும் கூறிக் கேள்விப்பட்டிருப்போம். சிலர் அறையே அதிரும் அளவுக்கு சிரிப்பார்கள்; சிலரின் புன்முறுவலே அவர்களின் அதிகபட்ச சிரிப்பாக இருக்கும். ஆனால், ... மேலும் பார்க்க

பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான பயிற்சியையும், ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை கொண்டு வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்... மேலும் பார்க்க

``எடப்பாடி தலைமையை ஏற்க முடியாது; அது தற்கொலைக்கு சமம்'' – தொடர்ந்து விமர்சிக்கும் டிடிவி தினகரன்

"ஓபிஎஸ்-சும் நானும் கூட்டணியில் இருந்து வெளியேறக் காரணம் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுதான்" என்று மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டம... மேலும் பார்க்க