செய்திகள் :

பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி

post image

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான பயிற்சியையும், ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை கொண்டு வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, பா.ஜ.க. எம்.பி.க்களின் இரண்டு நாள் கூட்டம் இன்று காலை டெல்லியில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் தொடங்கியது.

2027-ம் ஆண்டை வளர்ச்சி நோக்காகக் கொண்டு, சமூக வலைத்தளங்களை எம்.பி.க்கள் சிறப்பாக பயன்படுத்துவது போன்ற அம்சங்களை மையமாகக் கொண்டு இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதோடு, எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

முதல் நாளில், மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், வேளாண்மை, பாதுகாப்பு, எரிசக்தி, கல்வி, ரயில்வே, போக்குவரத்து போன்ற துறை கமிட்டிகளுடன் எம்.பி.க்கள் கலந்துரையாடினர். பிரதமருக்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது.

இரண்டாம் நாளில், வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான பயிற்சி எம்.பி.க்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில், இன்று காலை கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி, கூட்ட அரங்கின் கடைசி வரிசையில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்.

பிரதமர் பின்வரிசையில் அமர்ந்ததை கண்ட எம்.பி.க்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் தங்கள் இருக்கைகளில் வந்து அமர்ந்தனர்.

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``எடப்பாடி தலைமையை ஏற்க முடியாது; அது தற்கொலைக்கு சமம்'' – தொடர்ந்து விமர்சிக்கும் டிடிவி தினகரன்

"ஓபிஎஸ்-சும் நானும் கூட்டணியில் இருந்து வெளியேறக் காரணம் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுதான்" என்று மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டம... மேலும் பார்க்க

``ஆமை புகுந்த வீடும், பா.ஜ.க நுழைந்த மாநிலமும் உருப்படாது'' - ப.சிதம்பரம் காட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டியில் காங்கிரஸ் கட்சி புதிய அலுவலக கட்டட திறப்பு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு:"... மேலும் பார்க்க

Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் வாக்கிங் போகலாமா, உடற்பயிற்சி செய்யலாமா?

Doctor Vikatan:மூட்டுவலி (Arthritis) உள்ளவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா, எந்த வகையான உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். வாக்கிங் செய்யலாமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர்... மேலும் பார்க்க

பதவி பறிப்பு மசோதா: ``INDIA கூட்டணியில் அதிக குற்றப்பின்னணி இருக்கும் கட்சி திமுக'' - ADR அறிக்கை

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி அரசு, நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் பதவி நீக்க மசோதாவை அறிமுகப்படுத்தியது.அதில், “ஓர் அமைச்சர் பதவியில் இருக்கும்போது, ஐந்து ... மேலும் பார்க்க

ஆரோக்கியம் தருவது சைவமா; அசைவமா? - மருத்துவர் சொல்வதென்ன?

சாப்பாடு என்றாலே நம் எல்லோருடைய மனதிற்குள்ளும் அப்படியொரு சந்தோஷம் வரும். அது பசிக்கும்போது வீட்டில் அம்மா தன் கையால் பரிமாறும் சாம்பார் சாதமாக இருந்தாலும் சரி, நண்பர்களுடன் சுடச்சுட பிரியாணி சாப்பிடு... மேலும் பார்க்க

``அதிமுக-வில் செங்கோட்டையனுக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது”-வைத்திலிங்கம்!

ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "அதிமுகவில் இருக்கிற எல்லோரும் கட்சி ஒன்றிணைந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். இல்லை என்றால் முடியாது ... மேலும் பார்க்க