செய்திகள் :

சந்திர கிரகணம்: திருமலை ஏழுமலையான் கோயில் கதவுகள் மூடல்

post image

திருப்பதி: சந்திர கிரகணத்தையொட்டி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கதவுகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மூடப்பட்டது.

சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31 மணி வரை நிகழவுள்ளது.

இதனையொட்டி கிரணத்திற்கு 6 மணி நேரம் முன்பு கோயில்கள் கதவுகள் மூடப்படுவது மரபு.

தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்கள் கதவுகள் மூடப்பட்டது.

இந்நிலையில், திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலின் கதவுகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் திங்கள்கிழமை(செப் 8) அதிகாலை 3 மணி வரை மூடப்பட்டிருக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆா். நாயுடு தெரிவித்தார்.

அதேபோன்று தேவஸ்தானம் தொடா்புடைய அனைத்து கோயிகளும் ஞாயிற்றுக்கிழமை மதியம் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை காலை வேதங்களின்படி சுத்திகரிப்பு மற்றும் பிற சடங்குகளை முடித்த பிறகு, ஏழுமலையான் கோயில் கதவுகள் அதிகாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். பின்னர் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள் என்று கூறினாா்.

மேலும், செப்டம்பர் 16 ஆம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தை தேவஸ்தானம் நடத்த உள்ளது. இதன் காரணமாக , செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் விஐபி பிரேக் தரிசனங்களுக்கு எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது. பக்தா்கள் இதை மனதில் கொண்டு தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்குமாறு தேவஸ்தானம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் முழுமையாகத் தெரியும் சந்திர கிரகணம்! அடுத்து 2028-இல்தான்!

The Lord Venkateswara Swamy temple in Tirumala will remain closed from 3.30 pm on September 7 until 3 am on September 8 due to the lunar eclipse period, said an official from Tirumala Tirupati Devasthanams.

பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி

பாஜகவின் வாக்குத் திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ... மேலும் பார்க்க

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

யார் வேண்டுமானாலும் மாநாடு நடத்தி, கூட்டத்தை கூட்டலாம். ஆனால் அதில் பங்கேற்கும் சிறியவர்களால் ஓட்டுக் கிடைக்காது என தமிழக வனம் மற்றும் கதா்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறினாா்.சென்னையில் ஞாயிற்... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படாதது ஏன்?: நயினாா்நாகேந்திரன் கேள்வி

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படாதது ஏன்? என தமிழக பாஜக மாநிலத் தலலைவா் நயினாா்நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் ... மேலும் பார்க்க

செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையம்: ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ரயில்வே பொது மேலாளருக்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.இது... மேலும் பார்க்க

மணிப்பூர் 3 மணி நேர பயணத்தால் என்ன சாதிக்க விரும்புகிறார் மோடி? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

மணிப்பூர் 3 மணி நேர பயணத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி என்ன சாதிக்க விரும்புகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்த... மேலும் பார்க்க

ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொலை!

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.சத்தீ... மேலும் பார்க்க