செய்திகள் :

உடல் நலனைப் பேணுவதில் முன்னோடி பிரதமர்: மிலிந்த் சோமன்

post image

உடல் நலனைப் பேணுவதில் தனக்கு முன்னோடியாக பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக நடிகர் மிலிந்த் சோமன் தெரிவித்துள்ளார்.

தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மிலிந்த் சோமன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் உடல் ஆரோக்கியம் குறித்து அவர் பேசியதாவது,

உடல் நலன் என்பது வாழ்வின் அனைத்துவிதமான அழுத்தங்களிலும் துவண்டுவிடாமல் சுறுசுறுப்பாக இயங்கும் மனநிலையாகும்.

நீங்கள் செய்ய வேண்டியதை உங்களால் செய்ய முடிந்தால், அதுதான் உண்மையான உடற்தகுதியின் அளவுகோல். பைசெப்ஸ் அல்லது சிக்ஸ் பேக் வைத்து வயிற்றுப் பகுதியை உருவாக்குவது மட்டுமே உடற்தகுதி அல்ல.

நாடு முழுவதும் 10 லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள ஒருங்கிணைந்துள்ளனர். இது தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் இத்தனை நபர்கள் உடல்நலனை பேணுவதற்காக ஒன்றுகூடுவது இதுவே முதல்முறை.

இதுபோன்ற அதிக முன்னெடுப்புகளை நாம் மேற்கொள்ள வேண்டும். ஒருமுறை செய்துவிட்டு விட்டுவிடக்கூடாது. இதனைத் தொடர வேண்டும். உடல் நலனைப் பேணுவதில் பிரதமர் நரேந்திர மோடி முன்னோடியாக உள்ளார். நான் அவரின் ரசிகன் மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் அவரை முன்னுதாரணமாகக் கருதுகிறேன். தற்போது, போதைப் பொருள்களுக்கு எதிராக நாடு ஒன்றிணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளையொட்டி செப். 21ஆம் தேதி நாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 75 இடங்களில் 10,000 - 15,000 நபர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர். அதாவது, ஒரே நேரத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்று நடக்கவுள்ளனர். இது நாட்டிலேயே மிகப்பெரிய மற்றும் பிரமாண்ட நடைப்பயிற்சி என்ற சாதனையை படைக்கவுள்ளது.

இதையும் படிக்க |பள்ளி, மருத்துவமனைகளை விட மசூதிகள் அதிகம்! எங்கு தெரியுமா?

I am an admirer of PM Modi’s fitness: Milind Soman

பள்ளி, மருத்துவமனைகளை விட மசூதிகள் அதிகம்! எங்கு தெரியுமா?

பாகிஸ்தான் நாட்டில் பள்ளி மற்றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை விட மசூதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக பொருளாதாரக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. அதாவது, பள்ளிகளின் எண்ணிக்கையை விட... மேலும் பார்க்க

நள்ளிரவில் முழுமையாகத் தெரியும் சந்திர கிரகணம்! அடுத்து 2028-இல்தான்!

இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குப் பின் வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் இன்று(செப். 7) நள்ளிரவில் நிகழ்கிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணமாக மாறி, திங்கள்கிழ... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: நாளை மாதிரி வாக்குப்பதிவு - என்ன நடக்கும்?

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்.9-இல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக திங்கள்கிழமை(செப். 8) மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். மாதிரி... மேலும் பார்க்க

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் சோர்வு மற்றும் குறைந்த இதயத் துடிப்பு காரணமாக மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை !

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், புதூரில் ஷியாம் சுந்தரின் மனைவியும், அவரது குழந்தையும் கடந்த நான்கு ஆண்டுகளாக தனேஷுடன் வசி... மேலும் பார்க்க

பிரதமரின் மணிப்பூர் விசிட் 3 மணி நேரம்தானா?

இனமோதல் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லவிருக்கும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் பற்றி பாஜக வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.மணிப்பூரில் கடந்த 2023-இல் இனமோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்ட நிலை... மேலும் பார்க்க