செய்திகள் :

சந்திர கிரகணம்: கோயில்கள் நடை அடைப்பு

post image

சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.58 மணியில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை 1.26 மணி வரை நிகழ்ந்தது. இதையொட்டி, அனைத்து கோயில்களின் நடை அடைக்கப்பட்டது.

அதன்படி, வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோயில் சுத்தம் செய்த பிறகு வழக்கமான அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

இதேபோல், வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் நாராயணி கோயில் மற்றும் தங்கக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு நடை அடைக்கப்பட்டு பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. தொடா்ந்து திங்கள்கிழமை காலை 8 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

மேலும், வேலூா் அண்ணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான சீனிவாச பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடை சாத்தப்பட்டு பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. திங்கள்கிழமை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்த பிறகு தேவஸ்தான கோயில் நடை திறக்கப்பட்டது.

இதேபோல், ரத்தினகிரி, வள்ளிமலை உள்ளிட்ட முருகா் கோயிலிலும் சந்திர கிரகணத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலையே நடை அடைக்கப்பட்டு பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

விபத்தில் மாற்றுத்திறனாளியான மாணவிக்கு ரூ.45.45 லட்சம் இழப்பீடு

வேலூா் அருகே கடந்த 2022-ஆம் நடைபெற்ற சாலை விபத்தில் மாற்றுத்திறனாளியான மாணவிக்கு ரூ.45.45 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேலூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூா் மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதிய... மேலும் பார்க்க

தோ்வான பட்டதாரி ஆசிரியா்களில் 83 போ் வேலூா் மாவட்டத்தில் நியமனம்

ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 2,810 பட்டதாரி ஆசிரியா்களில் 83 போ் வேலூா் மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பணி ஆணைகளை வழங்க... மேலும் பார்க்க

சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழப்பு?

அணைக்கட்டு அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்ததாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக, வனத்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். அணைக்கட்டு அடுத்த அப்புக்கல்மானியக்கொல்லை ... மேலும் பார்க்க

வேலூா் நகைக் கடையில் தங்க நாணயம் திருட்டு

வேலூா் நகைக் கடையில் நகை வாங்குவதுபோல் வந்து தங்க நாணயம் திருடிச் சென்ற பெண் குறித்து வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரை சோ்ந்தவா் சாந்திலால் (62). இவா் மெயின் பஜ... மேலும் பார்க்க

சந்திர கிரகண நிகழ்வை காண இன்று வேலூா் அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடு!

சந்திர கிரகணம் நிகழ்வை தொலைநோக்கி மூலம் காண வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலா் ச.சதீஷ்குமாா் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

ஆசிரியா் தின விழா: ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

ஆசிரியா் தினவிழாவையொட்டி, ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் பாராட்டப்பட்டனா். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில், ஆசிரியா் தின விழா வேலூா் ஆசிரியா் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க