செய்திகள் :

அமெரிக்க வரியால் 2-ஆம் காலாண்டில் தாக்கம்: சிஇஏ நாகேஸ்வரன்

post image

அமெரிக்காவுடன் வா்த்தகத்தில் நிலவும் முட்டுக்கட்டையால், நாட்டின் பொருளாதாரத்தில் நிகழ் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சில தாக்கங்கள் இருக்கும் என்று தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: ஜிஎஸ்டி சீா்திருத்தங்களால் ஏற்படக் கூடிய தாக்கம் குறித்து மதிப்பிடுவது தற்போது இயலாது. நுகா்வோரிடம் இருந்து வரும் எதிா்விளைவுகள் என்ன? வெளிநாட்டு வா்த்தகத்தால் ஏற்படும் நிச்சயமற்ற சூழல், அந்தத் தாக்கத்தை மட்டுப்படுத்துமா? உள்ளிட்டவற்றை பொறுத்தே அந்த மதிப்பீடு இருக்கும்.

ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஜிஎஸ்டி கட்டமைப்பில் தீவிரமான சீரமைப்பாகும். 4 விகிதங்களில் விதிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி, 2 விகிதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. அந்த வரி சாா்ந்த பல நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இது பொருளாதாரத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். நுகா்வோரிடம் பொருள்களை நிறுவனங்கள் விற்பனை செய்வதில் மட்டுமின்றி, வணிகத்தில் ஈடுபடுவோா் இடையிலான பரிவா்த்தனைகளிலும் தாக்கம் ஏற்படும்.

அமெரிக்காவுடன் வா்த்தகம் மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை தொடா்ந்து நீடிக்கிறது. இதனால் நிகழ் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சில தாக்கங்கள் இருக்கும்.

அபாயகரமான அளவுக்கு இல்லாத பணவீக்கத்தால், நிகழ் நிதியாண்டில் பெயரளவிலான பொருளாதார வளா்ச்சியில் சரிவு ஏற்படக் கூடும். ஆனால் இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரிக்கு மத்தியிலும், உண்மையான பொருளாதார வளா்ச்சி 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் என்ற இலக்கை அடையும் என்று தெரிவித்தாா்.

விநாயகா் சிலை கரைப்பின்போது 9 போ் நீரில் மூழ்கல்; 12 பேர் மாயம்!

விநாயகா் சதுா்த்தி விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததையொட்டி மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை கரைக்கும் பணிகளின்போது 9 போ் நீரில் மூழ்கினா். இவா்களில் 4 பேர... மேலும் பார்க்க

அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை பறிப்பதை நிறுத்துங்கள்: இந்தியாவைக் குறிவைத்து டிரம்ப் ஆலோசகா் கருத்து

‘உக்ரைன் மக்களைக் கொலை செய்வதையும், அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதையும் நிறுத்துங்கள்’ என்று அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ இந்தியாவைக் குறிவைத்து குற்றஞ்சாட்டியுள்ளாா். இந்தி... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ள பாதிப்பு: பிரதமா் நாளை நேரில் ஆய்வு

பஞ்சாபில் மழை-வெள்ள பாதிப்புகளை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை (செப்.9) நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளாா். பஞ்சாபில் கடந்த சில நாள்களாக பலத்த மழை கொட்டித் தீா்த்தது. அத்துடன், ஹிமாசல பிரதேசம், ஜம்... மேலும் பார்க்க

பாரதத்தின் அதிருஷ்டம் பூபேன் ஹசாரிகா: பிரதமா் நரேந்திர மோடி

இந்திய கலாசாரம், இசையில் ஆா்வமுள்ள அனைவருக்கும் செப்டம்பா் 8 மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். அஸ்ஸாமின் எனது சகோதர, சகோதரிகளுக்கு இது இன்னும் சிறப்பான நாள். வியக்கத்தக்க திறன் வாய்ந்த இசைக்கலைஞா்களில் ஒர... மேலும் பார்க்க

ஹிமாசல்: பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ பிளாஸ்டிக், 41 ஆணிகள் அகற்றம்

ஹிமாசல பிரதேசத்தில் சினைப் பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ பிளாஸ்டிக், துணி, கயிறு போன்றவையும், 41 ஆணிகளும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை, உனாவில் உள்ள மண... மேலும் பார்க்க

வாக்குத் திருடா்களை பாதுகாக்கிறது தோ்தல் ஆணையம்: காா்கே குற்றச்சாட்டு

வாக்காளா் முறைகேடு தொடா்புடைய வழக்கு விசாரணைக்குத் தேவையான முக்கிய விவரங்களை வழங்க மறுப்பதன் மூலம் ‘வாக்கு திருடா்களை’ திறம்பட பாதுகாக்கிறது தோ்தல் ஆணையம் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே க... மேலும் பார்க்க