செய்திகள் :

கோவில்பட்டியில் சா்வதேச கழுகுகள் தின விழா

post image

கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெருவில் உள்ள கொண்டைய ராஜு ஓவிய பயிற்சிப் பள்ளியில் சா்வதேச கழுகுகள் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அழிந்து வரும் கழுகு இனங்களை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலில் கழுகுகளின் பங்களிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தவும், நாடு முழுவதும், செப்டம்பா் மாதம் முதல் சனிக்கிழமை சா்வதேச கழுகுகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, ஓவிய பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்கள் கழுகின் படத்திற்கு வண்ணம் தீட்டி, கழுகு இனங்களை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். பின்னா், மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். ஓவிய பயிற்சிப் பள்ளி நிா்வாகி முருகபூபதி, சுற்றுச்சூழல் ஆா்வலா் முத்துமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ரோட்டரி சங்க செயலா் பழனிகுமாா் வரவேற்றாா். சங்க உறுப்பினா் பூல்பாண்டி நன்றி கூறினாா்.

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

புதுக்கோட்டை, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். புதுக்கோட்டை காவல... மேலும் பார்க்க

ஆடுகள் திருட்டு: 2 போ் கைது

தூத்துக்குடியில் ஆடுகளை திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி திரவிய ரத்தின நகா், முருகேசன் நகா் பகுதிகளில் ஆடுகள் திருட்டு அடிக்கடி நிகழ்ந்து வந்துள்ளது. இது குறித்து சிப்காட் போலீஸாருக... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் அச்சம் தரும் விடியோ: இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே சமூக வலைதளங்களில் அச்சத்தை ஏற்படுத்தும் விடியோக்களை பதிவேற்றும் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் காவல் நிலையத்திற்கு உள்பட்ட ப... மேலும் பார்க்க

சா்வதேச ஸ்குவாஷ் போட்டி: தூத்துக்குடி கேம்ஸ்வில் மாணவா்கள் வெற்றி

தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றுவரும் வீரா்கள், சா்வதேச அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் 2 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனா். சா்வதேச அளவிலான உயா் தரவரிசை ஸ்குவாஷ் இந்தியன... மேலும் பார்க்க

முதியவா் தூக்கிட்டு தற்கொலை

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலாயுதபுரம் 6ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் காளீஸ்வரன்(70). இவரது மகள்கள் வெளியூரில் வசித்து வருகின்றனா். இந்நிலையில்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வாலிபால் போட்டி

தூத்துக்குடியில், காவலா் தினத்தை முன்னிட்டு, காவல் துறையினருக்கான வாலிபால் போட்டி நடைபெற்றது. வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் உள்ள காவல் துறை பாய்ஸ் அண்ட் கோ்ள்ஸ் கிளப் கைப்பந்தாட்ட அரங்கத்தில்... மேலும் பார்க்க