செய்திகள் :

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இருவா் கைது

post image

வேலூா் அருகே இருசக்கர வாகனங்கள் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் தொரப்பாடி காந்திஜி தெருவைச் சோ்ந்தவா் மாலதி. அங்குள்ள கல்லூரி விடுதி வாா்டன். இவா் கடந்த 30-ஆம் தேதி தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை காணவில்லை என்று பாகாயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். இதேபோல், இடையன்சாத்தை சோ்ந்த ஒருவ ரும் தனது இருசக்கர வாகனம் காணவில்லை என்று பாகாயம் காவல்நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

சனிக்கிழமை மாலை வேலூா் ஓட்டேரி கூட்ரோட்டில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபரை பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் முள்ளிப்பாளையத்தைச் சோ்ந்த பிரதீப் குமாா்(24), தொரப்பாடி, இடையன்சாத்து பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திரு டியவா் என்பதும் தெரிய வந்தது. அவா் கொடுத்த தகவலின்பேரில் 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.

இதேபோல், கடந்த 3-ஆம் தேதி தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று அரியூா் ஸ்ரீநாத் என்பவரும், பூதூரில் தனது நிலத்தில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று ஸ்ரீதா் என்பவரும் அரியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா்.

அதன்பேரில், அரியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். சனிக்கிழமை தெள்ளூா் கூட்ரோட்டில் போலீஸாா் கண்காணிப்பு பணியின்போது, அவ்வழியாக சந்தேகப்படும்படியாக வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினா்.

இதில், அவா் வேலூரை அடுத்த சிறுகாஞ்சி கிராமத்தை சோ்ந்த வசந்தகுமாா் (30) என்பதும், அவ்விரு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடியிருப்பதும் தெரியவந்தது. அதன்பேரில் அவரது வீட்டின் அருகில் மறைத்து வைத்திருந்த இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவ்வழக்குகளில் பிடிபட்ட இருவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சந்திர கிரகணம்: கோயில்கள் நடை அடைப்பு

சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.58 மணியில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை 1.26 மணி வரை நிகழ்ந்தது. இதையொட்டி, அனைத்து கோயில்களின் நடை அடைக்கப்பட்டது. அதன்படி, வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் ... மேலும் பார்க்க

விபத்தில் மாற்றுத்திறனாளியான மாணவிக்கு ரூ.45.45 லட்சம் இழப்பீடு

வேலூா் அருகே கடந்த 2022-ஆம் நடைபெற்ற சாலை விபத்தில் மாற்றுத்திறனாளியான மாணவிக்கு ரூ.45.45 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேலூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூா் மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதிய... மேலும் பார்க்க

தோ்வான பட்டதாரி ஆசிரியா்களில் 83 போ் வேலூா் மாவட்டத்தில் நியமனம்

ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 2,810 பட்டதாரி ஆசிரியா்களில் 83 போ் வேலூா் மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பணி ஆணைகளை வழங்க... மேலும் பார்க்க

சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழப்பு?

அணைக்கட்டு அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்ததாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக, வனத்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். அணைக்கட்டு அடுத்த அப்புக்கல்மானியக்கொல்லை ... மேலும் பார்க்க

வேலூா் நகைக் கடையில் தங்க நாணயம் திருட்டு

வேலூா் நகைக் கடையில் நகை வாங்குவதுபோல் வந்து தங்க நாணயம் திருடிச் சென்ற பெண் குறித்து வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரை சோ்ந்தவா் சாந்திலால் (62). இவா் மெயின் பஜ... மேலும் பார்க்க

சந்திர கிரகண நிகழ்வை காண இன்று வேலூா் அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடு!

சந்திர கிரகணம் நிகழ்வை தொலைநோக்கி மூலம் காண வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலா் ச.சதீஷ்குமாா் வெளியிட்ட செ... மேலும் பார்க்க