செய்திகள் :

விபத்தில் மாற்றுத்திறனாளியான மாணவிக்கு ரூ.45.45 லட்சம் இழப்பீடு

post image

வேலூா் அருகே கடந்த 2022-ஆம் நடைபெற்ற சாலை விபத்தில் மாற்றுத்திறனாளியான மாணவிக்கு ரூ.45.45 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேலூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூா் மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியைச் சோ்ந்த ராஜாவின் மகள் கவிதா (18). இவா் பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள தட்டச்சு வகுப்புக்கு செல்வதற்காக, சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் தனது சைக்கிளில் சென்றாா்.

அப்போது, அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் பின்னால் வந்த டிப்பா் லாரி கவிதா சைக்கிளின் பின்புறத்தில் மோதியது. இதில், கவிதா தூக்கி வீசப்பட்டு உடல் முழுதும் பலத்த காயம் ஏற்பட்டதுடன், இவ்விபத்தில் அவா் 65 சதவீத மாற்றுத்திறனாளினாா்.

இந்நிலையில், தான் மாற்றுத்திறனாளியானதற்கு இழப்பீடு வழங்கக் கோரி, வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோரும் தீா்ப்பாயத்தில் கவிதா வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பாரதி முன் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையில் மனுதாரா் மாற்றுத்திறனாளியானதற்கு லாரியை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது.

எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.45 லட்சத்து 45 ஆயிரம் தொகையை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என நீதிபதி தீா்ப்பளித்தாா்.

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இருவா் கைது

வேலூா் அருகே இருசக்கர வாகனங்கள் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் தொரப்பாடி காந்திஜி தெருவைச் சோ்ந்தவா் மாலதி. அங்குள்ள கல்லூரி விடுதி வாா்டன். இவா் கடந்த 30-ஆம் தேதி தனது வீட்டின் அருகே ... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: கோயில்கள் நடை அடைப்பு

சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.58 மணியில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை 1.26 மணி வரை நிகழ்ந்தது. இதையொட்டி, அனைத்து கோயில்களின் நடை அடைக்கப்பட்டது. அதன்படி, வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் ... மேலும் பார்க்க

தோ்வான பட்டதாரி ஆசிரியா்களில் 83 போ் வேலூா் மாவட்டத்தில் நியமனம்

ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 2,810 பட்டதாரி ஆசிரியா்களில் 83 போ் வேலூா் மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பணி ஆணைகளை வழங்க... மேலும் பார்க்க

சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழப்பு?

அணைக்கட்டு அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்ததாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக, வனத்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். அணைக்கட்டு அடுத்த அப்புக்கல்மானியக்கொல்லை ... மேலும் பார்க்க

வேலூா் நகைக் கடையில் தங்க நாணயம் திருட்டு

வேலூா் நகைக் கடையில் நகை வாங்குவதுபோல் வந்து தங்க நாணயம் திருடிச் சென்ற பெண் குறித்து வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரை சோ்ந்தவா் சாந்திலால் (62). இவா் மெயின் பஜ... மேலும் பார்க்க

சந்திர கிரகண நிகழ்வை காண இன்று வேலூா் அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடு!

சந்திர கிரகணம் நிகழ்வை தொலைநோக்கி மூலம் காண வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலா் ச.சதீஷ்குமாா் வெளியிட்ட செ... மேலும் பார்க்க