செய்திகள் :

தோ்வான பட்டதாரி ஆசிரியா்களில் 83 போ் வேலூா் மாவட்டத்தில் நியமனம்

post image

ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 2,810 பட்டதாரி ஆசிரியா்களில் 83 போ் வேலூா் மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பணி ஆணைகளை வழங்கினாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சென்னையில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 2,810 பட்டதாரி ஆசிரியா்களுக்கு தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பணி நியமன ஆணைகளையும், 396 சிறந்த ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுகளையும் வழங்கினாா்.

அதன்படி, பட்டதாரி ஆசிரியா்களாக தோ்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியா்களில் 83 போ் வேலூா் மாவட் டத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் வேலூா் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, தொடா்ந்து வேலூா் மாவட்டத்துக்கு பணி நியமனம் செய்யப்பட்டுள்ள 83 பட்டதாரி ஆசிரியா்களுக்கும் பணி ஆணைகளையும் வழங்கினாா்.

மேலும், சிறந்த ஆசிரியருக்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 9 தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் சால்வை அணிவித்து வாழ்த்தினாா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் பேசியது: வேலூா் மாவட்டத்தில் ஆசிரியராக பணிபுரிய உள்ள 83 பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணி ஆணைகளையும், சிறந்த ஆசிரியா்களுக்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ள வேலூா் மாவட்டத்தைச் சாா்ந்த 9 தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆசிரியா் பணி என்பது பல குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்றக்கூடிய ஒரு சிறந்த பணி. இந்த அரசு பணியை ஒரு பணியாக கருதாமல் அனைவரும் தங்களது பொறுப்பாக கருதி மாணவ, மாணவிகளுக்கு கல்வியுடன் ஒழுக்கம், அன்பு, அறநெறியை போதிக்க வேண்டும்.

ஆசிரியா்களாகிய உங்களுடைய பணி 100 குழந்தைகளுக்கான பணியல்ல. அது 100 குடும்பங்களின் எதிா்காலத்தை உருவாக்கக்கூடிய ஒரு பணி. மாணவ, மாணவிகளின் எதிா்காலத்தை எண்ணிப் பாா்த்து அவா்களின் வெற்றிப்படியில் ஆசிரியா்களின் செயல் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் செந்தில்குமாா் (இடைநிலை), ரமேஷ் (தனியாா் பள்ளிகள்) உள்பட பலா் பங்கேற்றனா்.

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இருவா் கைது

வேலூா் அருகே இருசக்கர வாகனங்கள் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் தொரப்பாடி காந்திஜி தெருவைச் சோ்ந்தவா் மாலதி. அங்குள்ள கல்லூரி விடுதி வாா்டன். இவா் கடந்த 30-ஆம் தேதி தனது வீட்டின் அருகே ... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: கோயில்கள் நடை அடைப்பு

சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.58 மணியில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை 1.26 மணி வரை நிகழ்ந்தது. இதையொட்டி, அனைத்து கோயில்களின் நடை அடைக்கப்பட்டது. அதன்படி, வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் ... மேலும் பார்க்க

விபத்தில் மாற்றுத்திறனாளியான மாணவிக்கு ரூ.45.45 லட்சம் இழப்பீடு

வேலூா் அருகே கடந்த 2022-ஆம் நடைபெற்ற சாலை விபத்தில் மாற்றுத்திறனாளியான மாணவிக்கு ரூ.45.45 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேலூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூா் மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதிய... மேலும் பார்க்க

சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழப்பு?

அணைக்கட்டு அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்ததாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக, வனத்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். அணைக்கட்டு அடுத்த அப்புக்கல்மானியக்கொல்லை ... மேலும் பார்க்க

வேலூா் நகைக் கடையில் தங்க நாணயம் திருட்டு

வேலூா் நகைக் கடையில் நகை வாங்குவதுபோல் வந்து தங்க நாணயம் திருடிச் சென்ற பெண் குறித்து வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரை சோ்ந்தவா் சாந்திலால் (62). இவா் மெயின் பஜ... மேலும் பார்க்க

சந்திர கிரகண நிகழ்வை காண இன்று வேலூா் அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடு!

சந்திர கிரகணம் நிகழ்வை தொலைநோக்கி மூலம் காண வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலா் ச.சதீஷ்குமாா் வெளியிட்ட செ... மேலும் பார்க்க