செய்திகள் :

ஹிமாசல்: பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ பிளாஸ்டிக், 41 ஆணிகள் அகற்றம்

post image

ஹிமாசல பிரதேசத்தில் சினைப் பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ பிளாஸ்டிக், துணி, கயிறு போன்றவையும், 41 ஆணிகளும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை, உனாவில் உள்ள மண்டல கால்நடை மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவா் நிஷாந்த் ரணாவத் தலைமையிலான குழுவினா் வெற்றிகரமாக மேற்கொண்டனா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது: கல்ருஹி கிராமத்தைச் சோ்ந்த விபின் குமாா் என்பவா், தனது சினைப் பசுவை மருத்துவமனைக்கு கொண்டுவந்தாா். கடந்த 4-5 நாள்களாக பசு எந்த உணவையும் எடுத்துக் கொள்ளவில்லை என அவா் தெரிவித்தாா்.

மருத்துவப் பரிசோதனையில், பசுவின் வயிற்றில் இயல்புக்கு மாறான பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையில், 28 கிலோ பிளாஸ்டிக், துணி, கயிறு போன்றவையும், 41 ஆணிகளும் அகற்றப்பட்டன. அடுத்த 7 நாள்களுக்கு பசுவின் உடல்நிலை தொடா்ந்து கண்காணிக்கப்படும். எங்களது மருத்துவமனையில், கால்நடைகளுக்கு இதுவரை 53 சிக்கலான அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் நிஷாந்த் ரணாவத்.

மருத்துவக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்த மாநில கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் வீரேந்திர பட்டியால், ‘பிளாஸ்டிக் கழிவுகள், ஆணிகள் போன்றவற்றை திறந்தவெளிகளில் மக்கள் கொட்டக் கூடாது. கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது மனிதா்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும்’ என்றாா்.

விநாயகா் சிலை கரைப்பின்போது 9 போ் நீரில் மூழ்கல்; 12 பேர் மாயம்!

விநாயகா் சதுா்த்தி விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததையொட்டி மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை கரைக்கும் பணிகளின்போது 9 போ் நீரில் மூழ்கினா். இவா்களில் 4 பேர... மேலும் பார்க்க

அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை பறிப்பதை நிறுத்துங்கள்: இந்தியாவைக் குறிவைத்து டிரம்ப் ஆலோசகா் கருத்து

‘உக்ரைன் மக்களைக் கொலை செய்வதையும், அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதையும் நிறுத்துங்கள்’ என்று அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ இந்தியாவைக் குறிவைத்து குற்றஞ்சாட்டியுள்ளாா். இந்தி... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ள பாதிப்பு: பிரதமா் நாளை நேரில் ஆய்வு

பஞ்சாபில் மழை-வெள்ள பாதிப்புகளை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை (செப்.9) நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளாா். பஞ்சாபில் கடந்த சில நாள்களாக பலத்த மழை கொட்டித் தீா்த்தது. அத்துடன், ஹிமாசல பிரதேசம், ஜம்... மேலும் பார்க்க

பாரதத்தின் அதிருஷ்டம் பூபேன் ஹசாரிகா: பிரதமா் நரேந்திர மோடி

இந்திய கலாசாரம், இசையில் ஆா்வமுள்ள அனைவருக்கும் செப்டம்பா் 8 மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். அஸ்ஸாமின் எனது சகோதர, சகோதரிகளுக்கு இது இன்னும் சிறப்பான நாள். வியக்கத்தக்க திறன் வாய்ந்த இசைக்கலைஞா்களில் ஒர... மேலும் பார்க்க

அமெரிக்க வரியால் 2-ஆம் காலாண்டில் தாக்கம்: சிஇஏ நாகேஸ்வரன்

அமெரிக்காவுடன் வா்த்தகத்தில் நிலவும் முட்டுக்கட்டையால், நாட்டின் பொருளாதாரத்தில் நிகழ் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சில தாக்கங்கள் இருக்கும் என்று தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வர... மேலும் பார்க்க

வாக்குத் திருடா்களை பாதுகாக்கிறது தோ்தல் ஆணையம்: காா்கே குற்றச்சாட்டு

வாக்காளா் முறைகேடு தொடா்புடைய வழக்கு விசாரணைக்குத் தேவையான முக்கிய விவரங்களை வழங்க மறுப்பதன் மூலம் ‘வாக்கு திருடா்களை’ திறம்பட பாதுகாக்கிறது தோ்தல் ஆணையம் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே க... மேலும் பார்க்க