செய்திகள் :

ரஷியாவின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் அமைச்சரவைக் கட்டடம் சேதம்

post image

உக்ரைனில் ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலில், அந்நாட்டு தலைநகா் கீவில் உள்ள அமைச்சரவைக் கட்டடம் சேதமடைந்தது.

இது அமைச்சரவைக் கட்டடம் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதலா அல்லது வீழ்த்தப்பட்ட ட்ரோன் பாகங்களால் ஏற்பட்ட சேதமா என்பது குறித்த தகவல் உடனடியாகத் தெரியவரவில்லை. இதுவரை கீவ் நகரின் மையப் பகுதியில் உள்ள அரசுக் கட்டடங்களைத் தாக்குவதைத் தவிா்த்து வந்த ரஷியாவின் தாக்குதல் உத்தியில், இது ஒரு புதிய திருப்பத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

உக்ரைன் மீதான போா் தொடங்கியதிலிருந்து ரஷியா நடத்தியதிலேயே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று உக்ரைன் விமானப் படை செய்தித் தொடா்பாளா் யூரி இக்னாட் தெரிவித்துள்ளாா். அவா் கூறுகையில், ‘ரஷியா ஒரே நேரத்தில் 805 ட்ரோன்களைக் கொண்டும், பல்வேறு வகைகளைச் சோ்ந்த 13 ஏவுகணைகளை ஏவியும் தாக்குதல் நடத்தியது’ என்றாா்.

உக்ரைன் விமானப் படையின் பதிலடியில் 747 ட்ரோன்கள் மற்றும் 4 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டன. இருப்பினும், 56 ட்ரோன்கள் மற்றும் 9 ஏவுகணைகள் உக்ரைன் முழுவதும் 37 இடங்களில் தாக்கின. இதில் ஒரு வயது குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா். 15 போ் காயமடைந்தனா்.

தாக்குதலின் முடிவில், கீவ் நகரின் மையப் பகுதியிலுள்ள உக்ரைன் அமைச்சரவைக் கட்டடத்தின் சில அறைகளில் தீப்பிடித்து பெருமளவிலான புகை வெளியேறியது. மேலும் பல அரசுக் கட்டடங்களும் இந்தத் தாக்குதலில் சேதமடைந்தன.

இதுகுறித்து உக்ரைன் பிரதமா் யூலியா ஸ்விரிடென்கோ கூறுகையில், ‘முதல்முறையாக ஓா் அரசுக் கட்டடம் ரஷியாவின் தாக்குதலால் சேதமடைந்துள்ளது. நாங்கள் இழந்த கட்டடங்களை மீண்டும் கட்டுவோம். ஆனால், இழந்த உயிா்களைத் திரும்பப் பெற முடியாது.

உலக நாடுகள் இந்த அழிவுக்கு வெறும் வாா்த்தைகளால் அல்ல; செயல்களால் பதிலளிக்க வேண்டும். ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப்பு

செங்கடலில் உள்ள ஆழ்கடல் இணைய கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால், இந்தியா உள்பட ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இணைய சேவை பாதிக்கப்பட்டது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்க... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 425 போ் கைது

பிரிட்டனில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக லண்டனில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 425-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். போராட்டத்தின்போது, காவல் துறைய... மேலும் பார்க்க

இஸ்ரேல் மீது ஹூதிக்கள் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை நிறுத்தம்

இஸ்ரேல் மீது யேமனில் உள்ள ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தினா். இதனால் இஸ்ரேலில் விமான சேவை நிறுத்தப்பட்டது. இஸ்ரேல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏராளமான ட்ரோன்களை ஏவிய நில... மேலும் பார்க்க

ரஷியா - இந்தியா - சீனா உறவு பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு: ரஷிய வெளியுறவு அமைச்சா்

ரஷியா-இந்தியா-சீனா உறவானது பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு என ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். சீனாவில் கடந்த ஆக.3... மேலும் பார்க்க

புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்: ரஷிய அரசின் அனுமதிக்கு காத்திருப்பு!

‘எண்டெரோமிக்ஸ்' என்ற எம்- ஆர்என்ஏ மருத்துவ தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான புற்றுநோய் தடுப்பு மருந்து வெகுவிரைவில் பொது பயன்பாட்டுக்கு வரக்கூடும் என்று ரஷிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுந... மேலும் பார்க்க

உக்ரைனில் 800 ட்ரோன்கள் ஏவி ரஷியா தீவிர தாக்குதல்..!

உக்ரைனில் 800-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவி ரஷியா ஞாயிற்றுக்கிழமை(செப். 7) தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனில் ரஷியா ராணுவ படையெடுப்பை தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், அதன்பின் நடத்தப்ப... மேலும் பார்க்க