செய்திகள் :

"மதுரையில் 100 அடி உயரத்தில் வ.உ.சி சிலை" - முதல்வருக்குப் புதிய நீதிக் கட்சித் தலைவர் கோரிக்கை

post image

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே உள்ள வ.உ.சி கலையரங்கத்தை ஒட்டி சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாருக்கு 11 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முன்னிலையில், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் சிலையைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வ.உ.சி சிலை திறப்பு
வ.உ.சி சிலை திறப்பு

இந்த நிகழ்ச்சியில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில், “ஆங்கிலேய அரசை எதிர்த்தால் அனைத்தும் இழந்து விடுவோம் எனத் தெரிந்தும் இந்திய மண்ணின் விடுதலைக்காகப் பாடுபட்டவர் வ.உ.சி. முதல்வர் ஸ்டாலின் தியாகிகளை மதிக்கக் கூடியவர். வ.உ.சி போன்றவர்கள் நமக்கு முந்தைய தலைமுறையினர்.

அதற்கு முந்தைய காலத்தில் மன்னர்களாக இருந்தவர்களையும், வெள்ளையனின் ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்துப் போராடியவர்கள். ஸ்டாலின் அனைத்து தியாகிகளுக்கும் மரியாதை செலுத்துகிறார். வ.உ.சி அவர்கள் மீது முதல்வர் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளார்.

இந்தியரால் கப்பல் ஓட்ட முடியும் என்று தூத்துக்குடியில் கப்பல் ஓட்டிய வ.உ.சி சிலையை ராஜபாளையத்தில் அமைப்பதற்கு அனுமதி கேட்டு வந்த நிலையில் முதல்வரிடம் பேசி அனுமதியை உடனடியாக வாங்கி கொடுத்தேன்” என்றார்.

வருவாய்த் துறை அமைச்சர்
வருவாய்த் துறை அமைச்சர்

அடுத்ததாகப் பேசிய புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், ”செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்கள் கடைசியாக சென்னை பெரம்பூரில் வாழ்ந்த வாடகை வீடு பாழடைந்து கிடக்கிறது. அதைப் புதுப்பித்து நினைவு மண்டபமாக முதல்வர் மாற்ற வேண்டும். மேலும் மதுரையில் நூறு அடி உயரத்தில் வ. உ. சி அவர்களுக்கு சிலை அமைக்க தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கிறோம்.

அதே போல் பிரதமர் மோடி அவர்கள் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வ.உ.சி பெயர் சூட்ட வேண்டும். மேலும் பாராளுமன்றத்தில் வ.உ.சி அவர்களுக்கு சிலை அமைக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வ.உ.சி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் பிரதமருக்குக் கோரிக்கை விடுக்கிறோம்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``ரஷ்யா மீது இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எடுக்க தயார்'' - ட்ரம்ப் மீண்டும் தடாலடி

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பல முயற்சிகள் எடுத்தும், அவை எதுவும் பலன் அளிக்கவில்லை.ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது போரை மேற்கொண்டுகொண்டே வருகிறது.இதன் காரணமாக, ரஷ்யாவிற்கு அழுத்த... மேலும் பார்க்க

``தமிழகத்தில் வாக்கு திருட்டு அரங்கேறாது; திமுக கூட்டணி வலிமையாக உள்ளது'' - ப.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சி சார்பில், "வாக்குத் திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை காப்போம்" என்ற அரசியல் மாநாடு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று இரவு நடைபெற்றது.மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினா... மேலும் பார்க்க

``நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா எனது கருத்தை ஆதரித்துள்ளனர்” - சஸ்பென்ஸ் சொன்ன செங்கோட்டையன்

அதிகாலை டெல்லி பயணம்அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை ஒன்றிணைக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் காலக்கெடு விதித்திருந்தார். இதையடுத்து அவர் கட்சி பதவியில் இருந்து நீக்... மேலும் பார்க்க

``பணயக் கைதிகளை விடுவியுங்கள்; இது என் கடைசி எச்சரிக்கை'' - ஹமாஸை மிரட்டும் ட்ரம்ப்

இஸ்ரேல்-பாலஸ்தீன போர்:இஸ்ரேல் - பாலஸ்தீன் போர் உலகளவில் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகிறது.இதற்கு காரணம், இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தியும், கடுமையான கெடுபிடிகளையும் விதித்தும... மேலும் பார்க்க

``ஆக்கப்பூர்வமாக பேசும்போது, அக்கப்போர் வேண்டாம்'' - செங்கோட்டையன் பற்றி கேள்விக்கு ஸ்டாலின் பதில்

சென்னை விமான நிலையத்தில் வரவேற்புஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (செப்டம்பர் 8) தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்... மேலும் பார்க்க