செய்திகள் :

மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

post image

மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், மதிமுகவின் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட திட்டங்கள் விதி-19, பிரிவு-5 விதி-19, பிரிவு- 12, விதி-35, பிரிவு-14, விதி-35 பிரிவு-15ன் படி துணைப் பொதுச்செயலர் உள்ளிட்ட கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போல், மல்லை சத்யா தனது துரோகம் செய்துவிட்டதாக வைகோ அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த மல்லை சத்யா, தன்னை துரோகி எனக் கூறியதற்கு பதிலாக விஷம் கொடுத்திருந்தால் குடித்துவிட்டு இறந்திருப்பேன் எனத் தெரிவித்தார். இதனிடையே, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக மல்லை சத்யா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேலும், கட்சியின் துணை பொதுச் செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாகவும், 15 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமாக தன்னிடம் பதிலளிக்கவும் வைகோ தெரிவித்தார். இதையடுத்து அதற்கான விளக்கத்தையும் கடந்த வாரம் மல்லை சத்யா மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MDMK General Secretary Vaiko has announced that Mallai Sathya will be permanently removed from the party.

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள்?

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், மயில... மேலும் பார்க்க

கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் விரிசல்: மக்கள் அச்சம்!

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கும் திருவள்ளுவா் சிலை - விவேகானந்தா் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.கண்ணாடி இழைப் பாலத்தின் ஓரிடத்... மேலும் பார்க்க

நாளை(செப்.9) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை(செப்.9) நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூ... மேலும் பார்க்க

சென்னை தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை, தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.சென்னை தலைமைச் செயலகத்தில் குண்டு வைத்திருப்பதாக வந்த மின்னஞ்சல் மூலமாக வந்த தகவலின... மேலும் பார்க்க

2 லட்சம் பேர் பங்கேற்ற 'புதுக்கோட்டை வாசிக்கிறது' நிகழ்ச்சி

8ஆவது புத்தகத் திருவிழாவையொட்டி, 'புதுக்கோட்டை வாசிக்கிறது' என்ற நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் சுமார் 2 லட்சம் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவிய... மேலும் பார்க்க

கருணாநிதியைவிட மோசமாக ஆட்சி நடத்தும் ஸ்டாலின்! அண்ணாமலை

முன்னாள் முதல்வர் கருணாநிதியைவிட மோசமான ஆட்சியை அவரது மகன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடத்துவதாக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வெளியே, புரட்சி... மேலும் பார்க்க