செய்திகள் :

கருச்சிதைவு: ஆராய்ச்சிக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கருவை தானமளித்த பெண்!

post image

ஐந்தாவது மாதத்தில் கருச்சிதைவு ஆன நிலையில் 32 வயது பெண், ஆராய்ச்சி நோக்கங்களுக்காக தனது கருவை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானம் செய்தார்.

ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த வந்தனா ஜெயினுக்கு திடீரென கருச்சிதைவு ஏற்பட்டது. அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில், கருவை தானமளிக்க அவர் முன்வந்தார்.

தில்லியின் பிதாம்பூராவைச் சேர்ந்த வந்தனா ஜெயின், தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலுடன் கருவை தானம் செய்ய முடிவு செய்தார். கருவை தானம் பெற ஆகம் ஸ்ரீ அறக்கட்டளை அனைத்து முன்முயற்சிகளையும் மேற்கொண்டது.

எங்கள் குடும்பம் மிகப்பெரிய துயரத்தை சந்தித்துள்ளது. ஆனாலும், மிகப்பெரிய நல்ல காரணங்களுக்காக கருவை தானம் செய்ய முடிவு செய்திருப்பதாக வந்தனா ஜெயின் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

வந்தனாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் கரு அகற்றப்பட்டு, அது எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கு இந்த கரு பயன்படுத்தப்படும் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு: ஹிந்து அமைப்புகள் போராட்டம்! கர்நாடகத்தில் 144 தடை!

கர்நாடகத்தில் விநாயகர் ஊர்வலத்தில் மர்ம நபர்கள் கல்வீசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து அமைப்புகள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.இதனிடையே, சம்பவம் நடைபெற்ற இடத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர... மேலும் பார்க்க

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்காக தில்லி புறப்பட்ட ஒடிசா முதல்வர்!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நாளை(செப்.9) நிகழவுள்ள நிலையில் ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தேசிய தலைநகருக்குப் புறப்பட்டுச் சென்றார். நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 2... மேலும் பார்க்க

மும்பையில் 23 மாடி கட்டடத்தில் பயங்கர தீவிபத்து: பெண் பலி

மும்பையில் 23 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து பெண் பலியானார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் தஹிசரில் உள்ள 23 மாடி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மக்கள் உடனடியாக க... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் கைது!

ஜம்மு -காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர், எல்லை பாதுகாப்புப் படையினரால் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு - காஷ்மீர் சர்வதேச எல்லையில் ஆர்.எஸ். புரா செக்ட... மேலும் பார்க்க

தில்லி - பாட்னா இடையே படுக்கை வசதிகொண்ட முதல் வந்தே பாரத்! முழு விவரம்

நாட்டில் இந்திய ரயில்வே தயாரித்துள்ள படுக்கை வசதிகொண்ட முதல் வந்தே பாரத் ரயில் தீபாவளைய முன்னிட்டு தில்லியிலிருந்து பாட்னா இடையே இயக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பார்க்க

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறைச்சாலை நூலகத்தில் பணி! நாளுக்கு ரூ. 525 ஊதியம்!

பாலியல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறைச்சாலையின் நூலகத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது, மாத ஊதியாக ரூ.1.... மேலும் பார்க்க