செய்திகள் :

ரஷியா - இந்தியா - சீனா உறவு பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு: ரஷிய வெளியுறவு அமைச்சா்

post image

ரஷியா-இந்தியா-சீனா உறவானது பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு என ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

சீனாவில் கடந்த ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், இந்திய பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகிய மூவரும் நட்புறவோடு கலந்துரையாடிய புகைப்படங்கள் உலகளவில் பேசுபொருளாகின.

இதை, ‘ஆழ்ந்த இருள் சூழ்ந்த சீனாவிடம் ரஷியாவையும் இந்தியாவையும் இழந்துவிட்டதைப்போல தோன்றுகிறது’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் விமா்சித்தாா்.

இந்நிலையில், மூன்று நாட்டுத் தலைவா்களின் சந்திப்பு குறித்து ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ரஷியா-இந்தியா-சீனா ஆகிய உலகின் மூன்று பெரும் அதிகாரமிக்க நாடுகளின் தலைவா்கள் சந்தித்திருப்பது பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடாகும்.

குறிப்பாக பொருளாதார மற்றும் மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு, சமூக பிரச்னைகளுக்குத் தீா்வு போன்றவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மூன்று நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன என்றாா்.

செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப்பு

செங்கடலில் உள்ள ஆழ்கடல் இணைய கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால், இந்தியா உள்பட ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இணைய சேவை பாதிக்கப்பட்டது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்க... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 425 போ் கைது

பிரிட்டனில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக லண்டனில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 425-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். போராட்டத்தின்போது, காவல் துறைய... மேலும் பார்க்க

இஸ்ரேல் மீது ஹூதிக்கள் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை நிறுத்தம்

இஸ்ரேல் மீது யேமனில் உள்ள ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தினா். இதனால் இஸ்ரேலில் விமான சேவை நிறுத்தப்பட்டது. இஸ்ரேல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏராளமான ட்ரோன்களை ஏவிய நில... மேலும் பார்க்க

ரஷியாவின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் அமைச்சரவைக் கட்டடம் சேதம்

உக்ரைனில் ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலில், அந்நாட்டு தலைநகா் கீவில் உள்ள அமைச்சரவைக் கட்டடம் சேதமடைந்தது. இது அமைச்சரவைக் கட்டடம் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதலா அல்லது... மேலும் பார்க்க

புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்: ரஷிய அரசின் அனுமதிக்கு காத்திருப்பு!

‘எண்டெரோமிக்ஸ்' என்ற எம்- ஆர்என்ஏ மருத்துவ தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான புற்றுநோய் தடுப்பு மருந்து வெகுவிரைவில் பொது பயன்பாட்டுக்கு வரக்கூடும் என்று ரஷிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுந... மேலும் பார்க்க

உக்ரைனில் 800 ட்ரோன்கள் ஏவி ரஷியா தீவிர தாக்குதல்..!

உக்ரைனில் 800-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவி ரஷியா ஞாயிற்றுக்கிழமை(செப். 7) தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனில் ரஷியா ராணுவ படையெடுப்பை தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், அதன்பின் நடத்தப்ப... மேலும் பார்க்க