பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
உக்ரைனில் 800 ட்ரோன்கள் ஏவி ரஷியா தீவிர தாக்குதல்..!
உக்ரைனில் 800-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவி ரஷியா ஞாயிற்றுக்கிழமை(செப். 7) தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனில் ரஷியா ராணுவ படையெடுப்பை தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், அதன்பின் நடத்தப்பட்டுள்ள மிகப்பெரியளவிலான வான்வழி தாக்குதலாக இன்றைய தாக்குதல் அமைந்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் 805 ட்ரோன்களை ஏவி தொடரப்பட்ட ரஷியாவின் இந்த தாக்குதல்களில் ஒரு சில முக்கிய அரசு கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாகவும், இந்த தாக்குதல்களில் இருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.