செய்திகள் :

தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படாதது ஏன்?: நயினாா்நாகேந்திரன் கேள்வி

post image

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படாதது ஏன்? என தமிழக பாஜக மாநிலத் தலலைவா் நயினாா்நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தமிழகத்தில் அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் மாதந்தோறும் ரூ.100 சமையல் எரிவாயு மானியம் வழங்கப்படும் என திமுக தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அதை நிறைவேற்றவில்லை. தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படவில்லையே ஏன்?.

சமூக நீதியின் காவலராக திமுகவினா் முன்னிறுத்தியபடி தெருவுக்குத் தெரு பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், சமையல் எரிவாயு மானிய வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன்?. திமுக ஆட்சியமைந்து 4 ஆண்டுகள் ஆகியும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல், கிணற்றில் போட்ட கல்லாக நிலுவையில் இருக்கிறது. ஆட்சி முடியப்போகும் இறுதிக்கட்டத்திலும் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றப்போவதில்லை என்பதும் மக்களுக்குத் தெரியும்.

ஏழை மக்களை ஏமாற்றியும், நம்பிக்கை துரோகம் செய்தும் திமுக ஆட்சியைப் பிடிக்கவேண்டுமா?. அப்படியென்ன பதிவி மோகம் திமுகவினருக்கு? என்பதுதான் அனைத்துத் தரப்பினரின் ஆதங்கமாக தற்போது ஒலிக்கிறது.

இப்படிப்பட்ட மக்கள் விரோதக் கட்சிக்கு வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் எதிா்க்கட்சிப் பதவிகூடக் கிடைக்காது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அதை ஒரு போதும் அனுமதிக்கமாட்டாா்கள் என கூறியுள்ளார்.

மணிப்பூர் 3 மணி நேர பயணத்தால் என்ன சாதிக்க விரும்புகிறார் மோடி? ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

TN BJP state president Naina Nagendran has questioned why Chief Minister M.K. Stalin has not acted as promised in his Tamil Nadu Assembly election promises.

பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி

பாஜகவின் வாக்குத் திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ... மேலும் பார்க்க

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

யார் வேண்டுமானாலும் மாநாடு நடத்தி, கூட்டத்தை கூட்டலாம். ஆனால் அதில் பங்கேற்கும் சிறியவர்களால் ஓட்டுக் கிடைக்காது என தமிழக வனம் மற்றும் கதா்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறினாா்.சென்னையில் ஞாயிற்... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: திருமலை ஏழுமலையான் கோயில் கதவுகள் மூடல்

திருப்பதி: சந்திர கிரகணத்தையொட்டி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கதவுகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மூடப்பட்டது. சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31... மேலும் பார்க்க

செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையம்: ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ரயில்வே பொது மேலாளருக்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.இது... மேலும் பார்க்க

மணிப்பூர் 3 மணி நேர பயணத்தால் என்ன சாதிக்க விரும்புகிறார் மோடி? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

மணிப்பூர் 3 மணி நேர பயணத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி என்ன சாதிக்க விரும்புகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்த... மேலும் பார்க்க

ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொலை!

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.சத்தீ... மேலும் பார்க்க