செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப...
நாலாட்டின்புதூா் பகுதியில் நாளை மின்தடை
எம். துரைசாமிபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக வானரமுட்டி, காலாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புதூா், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய் தலைவன்பட்டி, சிவஞானபுரம், வாகைத்தாவூா், சவலப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.9) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.