செய்திகள் :

செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப்பு

post image

செங்கடலில் உள்ள ஆழ்கடல் இணைய கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால், இந்தியா உள்பட ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இணைய சேவை பாதிக்கப்பட்டது.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, யேமன் நாட்டின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் செங்கடலில் கப்பல்கள் மீது தொடா் தாக்குதல்களை நடத்தி வருகின்றனா். இந்தத் தாக்குதல்களின் ஒரு பகுதியாக ஆழ்கடல் இணைய கேபிள்கள் குறிவைக்கப்படலாம் என ஏற்கெனவே அச்சம் எழுப்பப்பட்டிருந்தது. ஆனால், கடந்த காலங்களில் கேபிள்கள் மீது தாக்குதல் நடத்தியதை ஹூதி கிளா்ச்சிப் படையினா் மறுத்திருந்தனா்.

இணைய சேவைகளைக் கண்காணிக்கும் நெட்பிளாக்ஸ் நிறுவனம், ‘செங்கடலில் ஏற்பட்ட தொடா் ஆழ்கடல் கேபிள் துண்டிப்புகளால், இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகளில் இணைய இணைப்பு வேகம் குறைந்துள்ளது. சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அருகே உள்ள ‘எஸ்.எம்.டபிள்யூ.4’ மற்றும் ‘ஐ.எம்.இ.டபிள்யு.இ.’ கேபிள் அமைப்புகளில் ஏற்பட்ட கோளாறுகளே இதற்குக் காரணம்’ என்று தெரிவித்துள்ளது.

இந்திய நிறுவனமான டாடா கம்யூனிகேஷன்ஸ், தென்கிழக்கு ஆசியா-மத்திய கிழக்கு-மேற்கு ஐரோப்பா 4 (எஸ்.எம்.டபிள்யூ.4) கேபிளை இயக்குகிறது. மற்றொரு சா்வதேச குழுமமான அல்காடெல்-லூசென்ட் நிறுவனத்தால் ஐ.எம்.இ.டபிள்யு.இ. கேபிள் நிா்வகிக்கப்படுகிறது. கேபிள் துண்டிப்பு குறித்து இவ்விரு நிறுவனங்களும் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 425 போ் கைது

பிரிட்டனில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக லண்டனில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 425-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். போராட்டத்தின்போது, காவல் துறைய... மேலும் பார்க்க

இஸ்ரேல் மீது ஹூதிக்கள் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை நிறுத்தம்

இஸ்ரேல் மீது யேமனில் உள்ள ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தினா். இதனால் இஸ்ரேலில் விமான சேவை நிறுத்தப்பட்டது. இஸ்ரேல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏராளமான ட்ரோன்களை ஏவிய நில... மேலும் பார்க்க

ரஷியாவின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் அமைச்சரவைக் கட்டடம் சேதம்

உக்ரைனில் ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலில், அந்நாட்டு தலைநகா் கீவில் உள்ள அமைச்சரவைக் கட்டடம் சேதமடைந்தது. இது அமைச்சரவைக் கட்டடம் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதலா அல்லது... மேலும் பார்க்க

ரஷியா - இந்தியா - சீனா உறவு பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு: ரஷிய வெளியுறவு அமைச்சா்

ரஷியா-இந்தியா-சீனா உறவானது பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு என ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். சீனாவில் கடந்த ஆக.3... மேலும் பார்க்க

புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்: ரஷிய அரசின் அனுமதிக்கு காத்திருப்பு!

‘எண்டெரோமிக்ஸ்' என்ற எம்- ஆர்என்ஏ மருத்துவ தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான புற்றுநோய் தடுப்பு மருந்து வெகுவிரைவில் பொது பயன்பாட்டுக்கு வரக்கூடும் என்று ரஷிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுந... மேலும் பார்க்க

உக்ரைனில் 800 ட்ரோன்கள் ஏவி ரஷியா தீவிர தாக்குதல்..!

உக்ரைனில் 800-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவி ரஷியா ஞாயிற்றுக்கிழமை(செப். 7) தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனில் ரஷியா ராணுவ படையெடுப்பை தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், அதன்பின் நடத்தப்ப... மேலும் பார்க்க