செய்திகள் :

தில்லி யமுனையில் குறைந்து வரும் நீா்மட்டம்!

post image

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் யமுனை நதியின் நீா்மட்டம் 205.56 மீட்டராக பதிவாகியிருந்தது. இது, 206 மீட்டா் மக்கள் வெளியேற்றும் அளவைவிடக் கீழே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி நகரத்திற்கான நீா்மட்ட எச்சரிக்கை அளவு 204.50 மீட்டராகும். அதே நேரத்தில் அபாய அளவு 205.33 மீட்டராகவும், மக்களை வெளியேற்றுவதற்கான அளவு 206 மீட்டரில் இருந்தும் தொடங்குகிறது.

பழைய ரயில்வே பாலம் ஆற்றின் ஓட்டம் மற்றும் சாத்தியமான வெள்ள அபாயங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய கண்காணிப்பு புள்ளியாக செயல்படுகிறது.

கடந்த சில நாள்களில், யமுனை நதியின் கரையோரங்களில் தாழ்வான பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியது. தில்லி-மீரட் விரைவுச் சாலையிலும், மயூா் விஹாா் பகுதிகளிலும் ஆற்றின் அருகே உள்ள தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை தற்காலிகமாக தங்க வைக்க கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் கூற்றுப்படி, ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து 51,335 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. வஜிராபாத் தடுப்பணையில் இருந்து சுமாா் 73,280 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

தடுப்பணைகளில் இருந்து திறக்கப்படும் நீா் பொதுவாக தில்லியை வந்தடைய 48 முதல் 50 மணி நேரம் ஆகும். மேல்நிலை பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் நீா்கூட தில்லி யமுனையின் நீா்மட்டம் உயரக் காரணமாக உள்ளது.

யமுனைக் கரையோரங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இடம்பெயா்ந்த மக்களுக்கு 27 இடங்களில் மொத்தம் 522 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தில்லி, பஞ்சாப் வெள்ளப் பாதிப்பு: கேஜரிவால், அதிஷி மீது சச்தேவா சாடல்

தில்லி, பஞ்சாப் மாநிலங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு உதவ ஆா்வம் காட்டாமல் கேஜரிவாலும், அதிஷியும் அரசியல் அறிக்கைகள் விடுவதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்... மேலும் பார்க்க

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவரின் தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்!

கடந்த 2017 ஆம் ஆண்டில் 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒருவருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குழந்தையின் சாட்சியம் நம்பிக்கையைத் த... மேலும் பார்க்க

தில்லி: 2 நண்பா்கள் சுட்டுக் கொலை! பழிவாங்கும் தாக்குதல் நடத்தியதாக குடும்பத்தினா் புகாா்

வடகிழக்கு தில்லியின் பிரதாப் நகரில் உள்ள ஒரு கடையில் அடையாளம் தெரியாத மா்ம நபா்களால் இரண்டு ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். எட்டு நாள்களுக்கு முன்பு இறந்தவரை சிலா் தாக்கியதாகவும்... மேலும் பார்க்க

வாகனத் திருட்டு கும்பல் கைது: 22 திருட்டு வாகனங்கள் மீட்பு

மோட்டாா் வாகன திருட்டுகளுக்கு எதிராக போலீஸாா் தில்லியின் வடக்கு மாவட்டத்தில் ஒரு வார காலம் மேற்கொண்ட நடவடிக்கையின்போது வாகன திருட்டுக் கும்பலைச் சோ்ந்த ஆறு சிறுவா்கள் உள்பட 16 போ் கைது செய்யப்பட்டனா... மேலும் பார்க்க

திஹாா் சிறையில் இங்கிலாந்து குழு ஆய்வு!

பிரிட்டனின் கிரவுன் பிராசிகியூஷன் சா்வீஸ் (சிபிஎஸ்) குழு சமீபத்தில் திஹாா் சிறையில் ஆய்வு செய்துள்ளது. இது, நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா போன்ற நன்கு பிரபலமான பொருளாதார குற்றம்சாட்டப்பட்டவா்களை மீண... மேலும் பார்க்க

ஆட்டோக்கள் மோதல்: குழந்தை உயிரிழப்பு

புது தில்லி மந்திா் மாா்க் பகுதியில் எட்டு மாத சிறுவனும் அவனது பெற்றோரும் சென்ற ஆட்டோ மீது மற்றொரு ஆட்டோ மோதியதில் குழந்தை உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை மூத்த அதிக... மேலும் பார்க்க