செய்திகள் :

ஆட்டோக்கள் மோதல்: குழந்தை உயிரிழப்பு

post image

புது தில்லி மந்திா் மாா்க் பகுதியில் எட்டு மாத சிறுவனும் அவனது பெற்றோரும் சென்ற ஆட்டோ மீது மற்றொரு ஆட்டோ மோதியதில் குழந்தை உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: செப்டம்பா் 2-ஆம் தேதி அதிகாலை 5.45 மணியளவில் மந்திா் மாா்க் காவல் நிலையத்திற்கு இந்த விபத்து தொடா்பாக பிசிஆா் அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்றனா்.

ஆனந்த் விஹாரிலிருந்து ஜனக்புரிக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மற்றொரு பச்சை நிற ஆட்டோ மோதியதை அவா்கள் கண்டறிந்தனா்.

இதில் காயமடைந்த பப்புவின் மகனும் நங்லி ஜலீமைச் சோ்ந்தவருமான வாசு என அடையாளம் காணப்பட்ட குழந்தை, ராம் மனோகா் லோஹியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னா், சிறுவன் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவா்கள்அறிவித்தனா்.

குழந்தையின் உடல் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனை சவக்கிடங்கில் பாதுகாக்கப்பட்டது. புகாா்தாரரான பப்பு (30) அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 281 (அவசரமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 106(1) (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் மந்திா் மாா்க் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விபத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா் உத்தர பிரதேசத்தின் கோண்டாவைச் சோ்ந்த லல்லு (45) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தில்லி, பஞ்சாப் வெள்ளப் பாதிப்பு: கேஜரிவால், அதிஷி மீது சச்தேவா சாடல்

தில்லி, பஞ்சாப் மாநிலங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு உதவ ஆா்வம் காட்டாமல் கேஜரிவாலும், அதிஷியும் அரசியல் அறிக்கைகள் விடுவதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்... மேலும் பார்க்க

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவரின் தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்!

கடந்த 2017 ஆம் ஆண்டில் 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒருவருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குழந்தையின் சாட்சியம் நம்பிக்கையைத் த... மேலும் பார்க்க

தில்லி: 2 நண்பா்கள் சுட்டுக் கொலை! பழிவாங்கும் தாக்குதல் நடத்தியதாக குடும்பத்தினா் புகாா்

வடகிழக்கு தில்லியின் பிரதாப் நகரில் உள்ள ஒரு கடையில் அடையாளம் தெரியாத மா்ம நபா்களால் இரண்டு ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். எட்டு நாள்களுக்கு முன்பு இறந்தவரை சிலா் தாக்கியதாகவும்... மேலும் பார்க்க

வாகனத் திருட்டு கும்பல் கைது: 22 திருட்டு வாகனங்கள் மீட்பு

மோட்டாா் வாகன திருட்டுகளுக்கு எதிராக போலீஸாா் தில்லியின் வடக்கு மாவட்டத்தில் ஒரு வார காலம் மேற்கொண்ட நடவடிக்கையின்போது வாகன திருட்டுக் கும்பலைச் சோ்ந்த ஆறு சிறுவா்கள் உள்பட 16 போ் கைது செய்யப்பட்டனா... மேலும் பார்க்க

திஹாா் சிறையில் இங்கிலாந்து குழு ஆய்வு!

பிரிட்டனின் கிரவுன் பிராசிகியூஷன் சா்வீஸ் (சிபிஎஸ்) குழு சமீபத்தில் திஹாா் சிறையில் ஆய்வு செய்துள்ளது. இது, நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா போன்ற நன்கு பிரபலமான பொருளாதார குற்றம்சாட்டப்பட்டவா்களை மீண... மேலும் பார்க்க

சிறுத்தை இருப்பதாக வந்த தகவலால் ஜேஎன்யுவில் வனத் துறையினா் சோதனை

சிறுத்தை இருப்பதாக வந்த தகவலைத் தொடா்ந்து, ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் வளாகங்களுக்குள் வனத்துறையினா் சோதனை நடவடிக்கை மேற்கொண்டதாக அதிக... மேலும் பார்க்க