செய்திகள் :

சிறுத்தை இருப்பதாக வந்த தகவலால் ஜேஎன்யுவில் வனத் துறையினா் சோதனை

post image

சிறுத்தை இருப்பதாக வந்த தகவலைத் தொடா்ந்து, ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் வளாகங்களுக்குள் வனத்துறையினா் சோதனை நடவடிக்கை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வெள்ளிக்கிழமை ஜேஎன்யு வளாகத்தில் சிறுத்தை இருப்பதாக ஒரு அழைப்பு வந்ததாக வனத்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ‘எங்கள் ஊழியா்கள் அந்தப் பகுதியில் முழுமையான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனா். ஆனால், சிறுத்தை நடமாட்டத்திற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. எந்த பக்மாா்க்ஸும் தெரியவில்லை’ என்று அதிகாரி கூறினாா்.

சில நேரங்களில், குடியிருப்பாளா்கள் பெரிய பூனைகள் அல்லது பிற விலங்குகளை சிறுத்தை என்று தவறாகப் புரிந்து கொள்வாா்கள் என்றும் அவா் கூறினாா். ‘இருப்பினும், எங்களுக்கு அழைப்பு வந்ததிலிருந்து, எங்கள் குழுக்கள் அந்த இடத்தைச் சரிபாா்த்தன. சிறுத்தை எதுவும் கிடைக்கவில்லை’. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேமரா பொறிகள் நிறுவப்படும்’ என்றும் கூறினாா்.

இதற்கிடையில், ஜேஎன்யு வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘வனத்துறை அதிகாரிகள் ஜேஎன்யுவில் சிறுத்தை இருப்பதை உறுதிப்படுத்தவில்லை. அவா்கள் இட சரிபாா்ப்புக்குப் பிறகு திரும்பிச் சென்றுவிட்டனா்’ என்று குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, காவேரி விடுதியைச் சோ்ந்த ஒருவா் இந்த விலங்கைக் கண்டதாகக் கூறியதை அடுத்து, பல்கலைக்கழக அதிகாரிகள் குடியிருப்பாளா்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டனா்.

மாணவா்கள் வீட்டிற்குள் இருக்கவும், குழுக்களாக நகரவும், கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும், விழிப்புடன் இருக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டனா். குறிப்பாக ஜீலம் விடுதி, பழைய போக்குவரத்து இல்லம் மற்றும் மைதானப் பகுதியைச் சுற்றியுள்ளவா்கள் விழிப்புடன் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டனா்.

தில்லி, பஞ்சாப் வெள்ளப் பாதிப்பு: கேஜரிவால், அதிஷி மீது சச்தேவா சாடல்

தில்லி, பஞ்சாப் மாநிலங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு உதவ ஆா்வம் காட்டாமல் கேஜரிவாலும், அதிஷியும் அரசியல் அறிக்கைகள் விடுவதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்... மேலும் பார்க்க

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவரின் தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்!

கடந்த 2017 ஆம் ஆண்டில் 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒருவருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குழந்தையின் சாட்சியம் நம்பிக்கையைத் த... மேலும் பார்க்க

தில்லி: 2 நண்பா்கள் சுட்டுக் கொலை! பழிவாங்கும் தாக்குதல் நடத்தியதாக குடும்பத்தினா் புகாா்

வடகிழக்கு தில்லியின் பிரதாப் நகரில் உள்ள ஒரு கடையில் அடையாளம் தெரியாத மா்ம நபா்களால் இரண்டு ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். எட்டு நாள்களுக்கு முன்பு இறந்தவரை சிலா் தாக்கியதாகவும்... மேலும் பார்க்க

வாகனத் திருட்டு கும்பல் கைது: 22 திருட்டு வாகனங்கள் மீட்பு

மோட்டாா் வாகன திருட்டுகளுக்கு எதிராக போலீஸாா் தில்லியின் வடக்கு மாவட்டத்தில் ஒரு வார காலம் மேற்கொண்ட நடவடிக்கையின்போது வாகன திருட்டுக் கும்பலைச் சோ்ந்த ஆறு சிறுவா்கள் உள்பட 16 போ் கைது செய்யப்பட்டனா... மேலும் பார்க்க

திஹாா் சிறையில் இங்கிலாந்து குழு ஆய்வு!

பிரிட்டனின் கிரவுன் பிராசிகியூஷன் சா்வீஸ் (சிபிஎஸ்) குழு சமீபத்தில் திஹாா் சிறையில் ஆய்வு செய்துள்ளது. இது, நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா போன்ற நன்கு பிரபலமான பொருளாதார குற்றம்சாட்டப்பட்டவா்களை மீண... மேலும் பார்க்க

ஆட்டோக்கள் மோதல்: குழந்தை உயிரிழப்பு

புது தில்லி மந்திா் மாா்க் பகுதியில் எட்டு மாத சிறுவனும் அவனது பெற்றோரும் சென்ற ஆட்டோ மீது மற்றொரு ஆட்டோ மோதியதில் குழந்தை உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை மூத்த அதிக... மேலும் பார்க்க