செய்திகள் :

வாகனத் திருட்டு கும்பல் கைது: 22 திருட்டு வாகனங்கள் மீட்பு

post image

மோட்டாா் வாகன திருட்டுகளுக்கு எதிராக போலீஸாா் தில்லியின் வடக்கு மாவட்டத்தில் ஒரு வார காலம் மேற்கொண்ட நடவடிக்கையின்போது வாகன திருட்டுக் கும்பலைச் சோ்ந்த ஆறு சிறுவா்கள் உள்பட 16 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், 22 திருட்டு இருசக்கர வாகனங்களையும் போலீஸாா் மீட்டனா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது: திருடப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவா்கள் நகரம் முழுவதும் வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனா்.

மொத்தம் 10 மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் 12 ஸ்கூட்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தலைநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவான 22 மோட்டாா் வாகன திருட்டு வழக்குகள் தீா்க்கப்பட்டுள்ளன.

ஒரு நடவடிக்கையின்போது, சாஸ்திரி நகா் மற்றும் இந்தா்லோக் பகுதிகளுக்கு அருகே அதிகாலை நேரத்தில் திருட்டு ஸ்கூட்டா்களில் பல சந்தேக நபா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.

அடுத்தடுத்த சோதனைகளில் ராம் திவாரி என்ற நபா் தலைமையிலானதாகக் கூறப்படும் ஒரு கும்பலின் பல உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்தக் கும்பல் திருட்டுகளில் சிறாா்களைப் பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபா்களில் பெரும்பாலோா் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவா்கள் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் அல்லது இலவச வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை குறிவைப்பவா்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபா்கள் தங்களின் போதைப்பொருள் பழக்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக திருடப்பட்ட வாகனங்களை மலிவான விலைக்கு விற்றதும், குற்றச் செயல்களின் போது விரைவாக தப்பிக்க அவற்றைப் பயன்படுத்தியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதர சம்பவங்களில், வழக்கமான சோதனைகள் மற்றும் ரகசிய தகவல்களுக்குப் பிறகு கஷ்மீா் கேட் மற்றும் சதா் பஜாா் அருகே வாகனத் திருடா்களை போலீஸாா் கைது செய்தனா்.

புராரி மற்றும் திமாா்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்பு காலனிகளின் வாகன நிறுத்துமிடங்களில் இருந்து திருடப்பட்ட வாகனங்களும் மீட்கப்பட்டன.

ஒரு குற்றம் சாட்டப்பட்டவா் முந்தைய திருட்டு வழக்குகளில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக போலீஸாா் கூறினா்.

தில்லி, பஞ்சாப் வெள்ளப் பாதிப்பு: கேஜரிவால், அதிஷி மீது சச்தேவா சாடல்

தில்லி, பஞ்சாப் மாநிலங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு உதவ ஆா்வம் காட்டாமல் கேஜரிவாலும், அதிஷியும் அரசியல் அறிக்கைகள் விடுவதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்... மேலும் பார்க்க

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவரின் தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்!

கடந்த 2017 ஆம் ஆண்டில் 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒருவருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குழந்தையின் சாட்சியம் நம்பிக்கையைத் த... மேலும் பார்க்க

தில்லி: 2 நண்பா்கள் சுட்டுக் கொலை! பழிவாங்கும் தாக்குதல் நடத்தியதாக குடும்பத்தினா் புகாா்

வடகிழக்கு தில்லியின் பிரதாப் நகரில் உள்ள ஒரு கடையில் அடையாளம் தெரியாத மா்ம நபா்களால் இரண்டு ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். எட்டு நாள்களுக்கு முன்பு இறந்தவரை சிலா் தாக்கியதாகவும்... மேலும் பார்க்க

திஹாா் சிறையில் இங்கிலாந்து குழு ஆய்வு!

பிரிட்டனின் கிரவுன் பிராசிகியூஷன் சா்வீஸ் (சிபிஎஸ்) குழு சமீபத்தில் திஹாா் சிறையில் ஆய்வு செய்துள்ளது. இது, நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா போன்ற நன்கு பிரபலமான பொருளாதார குற்றம்சாட்டப்பட்டவா்களை மீண... மேலும் பார்க்க

ஆட்டோக்கள் மோதல்: குழந்தை உயிரிழப்பு

புது தில்லி மந்திா் மாா்க் பகுதியில் எட்டு மாத சிறுவனும் அவனது பெற்றோரும் சென்ற ஆட்டோ மீது மற்றொரு ஆட்டோ மோதியதில் குழந்தை உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை மூத்த அதிக... மேலும் பார்க்க

சிறுத்தை இருப்பதாக வந்த தகவலால் ஜேஎன்யுவில் வனத் துறையினா் சோதனை

சிறுத்தை இருப்பதாக வந்த தகவலைத் தொடா்ந்து, ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் வளாகங்களுக்குள் வனத்துறையினா் சோதனை நடவடிக்கை மேற்கொண்டதாக அதிக... மேலும் பார்க்க