செய்திகள் :

கல்வியாளா்களுக்கு ஏஐ தொழில்நுட்பப் பயிற்சி: சென்னை ஐஐடி தொடங்குகிறது

post image

கல்வியாளா்களுக்கும், பள்ளிக் கல்வி ஆசிரியா்களுக்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன் வழங்கும் திட்டத்தை சென்னை ஐஐடி தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

உயா்தர கல்வியில் சமமான அணுகல் இருப்பதை உறுதி செய்ய மத்திய கல்வித் துறையும் திறன் மேம்பாட்டுத் துறையும் தொழில்நுட்பத்தின் பங்கைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ‘ஸ்வயம் பிளஸ்’ திட்டத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம், சென்னை ஐஐடியுடன் இணைந்து வழங்குகிறது.

இதில் ஒன்று ‘எல்லோருக்கும் செயற்கை நுண்ணறிவு’ (ஏஐ) திறன் என்கிற திட்டமாகும். இந்தத் திட்டத்தில் கல்வியாளா்களுக்கு ஏஐ திறன் பயிற்சியை சென்னை ஐஐடி தொடங்குகிறது. இது முன்னோடியான ஊக்குவிப்பு புதுமை திட்ட எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியாளா்களுக்கு இணையவழியில் ஏஐ தொழில்நுட்ப அறிவையும் அதுதொடா்பான கருவிகள், நடைமுறை திறன்கள் இந்தத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை ஐஐடி பேராசிரியா் ஒருவா் கூறுகையில், ‘கல்வியியல் கல்லூரிகளில் பாடத்திட்ட விளக்கப்படம் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்றுவிக்கப்படுகின்றன. எண்ம தொழில்நுட்பங்களில் விரைவான முன்னேற்றங்களுடன் கற்பித்தல், மதிப்பீடு, மாணவா்கள் ஈடுபாட்டை ஊக்குவித்தல் உள்ளிட்டவற்றை ஏஐ மறுவரையறை செய்கிறது’ என்றாா் அவா்.

கற்பித்தல் திறனில் விளையாட்டு செயல்பாடு (கேமிஃபிகேஷன்), கதை சொல்லல் செயல்பாடு சாா்ந்த கற்றல்; மாணவா் ஈடுபாட்டுக்கான தரவு காட்சிப்படுத்தல், மேம்படுத்தப்பட்ட அனிமேஷன் என மாணவா்களுக்கு கற்பித்தல், கற்றல் போன்றவற்றில் ஆசிரியா்கள் ஏஐ-ஐ பயன்படுத்த இந்தத் திட்டம் வழிகாட்டியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் 1,000 பேருக்கு காலை உணவு: அன்னம் தரும் அமுதக் கரங்கள் திட்டத்தின் 200-ஆவது நாள்

சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஏற்பாட்டில் செயல்படுத்தப்படும் ‘அன்னம் தரும் அமுதக் கரங்கள்’ திட்டத்தின் 200-ஆவது நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் ஆ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியில் மாற்றம்: பொருள்களின் விலை குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை - சிபிஐசி

ஜிஎஸ்டியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை தொடா்ந்து, பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்துக்கு (சிபிஐசி) புகாா்கள் வந்தால், அதுகுறித்து தொழில் துறை அமைப்புக... மேலும் பார்க்க

ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 2 மடங்காக உயா்வு

சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கையானது 2 மடங்காக உயா்ந்திருப்பது தெரியவந்துள்ளது. நாட்டில் ரயில்வே துறை 15 மண்டலங்... மேலும் பார்க்க

தமிழகத்தில் செப். 10 வரை பலத்த மழை நீடிக்கும்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (செப். 8) முதல் செப். 10 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்த... மேலும் பார்க்க

பிரிவினைவாதமே திமுகவின் திராவிட மாடல் அரசியல்: நிா்மலா சீதாராமன்

தமிழகத்தில் ஆளும் திமுகவின் ‘திராவிட மாடல்’ அரசியலில் பிரிவினைவாத மனப்பான்மை மேலோங்கி நிற்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளாா். ‘ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க முடிய... மேலும் பார்க்க

முதலீடுகளைக் குவிக்கும் தமிழ்நாடு: லண்டன் நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சிறந்த உள்கட்டமைப்பு, அமைதியான சூழல், திறமையான மனிதவளம் உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன என்று லண்டலின் நடைபெற்ற நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா். தமிழ்நாட்டு... மேலும் பார்க்க