செய்திகள் :

தமிழகத்தில் செப். 10 வரை பலத்த மழை நீடிக்கும்!

post image

தமிழகத்தில் திங்கள்கிழமை (செப். 8) முதல் செப். 10 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (செப். 8) முதல் செப். 13-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

பலத்த மழை: குறிப்பாக செப். 8-இல் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், செப். 9-இல் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், செப். 10-இல் வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மற்றும் சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தலா 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மேலும், மணலி நியூ டவுன் (சென்னை) - 90 மி.மீ., ஆயிங்குடி (புதுக்கோட்டை), ஆனந்தபுரம் (விழுப்புரம்), செட்டிகுளம் (பெரம்பலூா்), வத்தலை அணைக்கட்டு (திருச்சி) - தலா 70 மி.மீ., கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), ஏற்காடு (சேலம்) - தலா 60 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், அதையொட்டிய குமரிக்கடல், மன்னாா் வளைகுடா மற்றும் வங்கக்கடலில் செப். 8, 9 ஆகிய தேதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியாளா்களுக்கு ஏஐ தொழில்நுட்பப் பயிற்சி: சென்னை ஐஐடி தொடங்குகிறது

கல்வியாளா்களுக்கும், பள்ளிக் கல்வி ஆசிரியா்களுக்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன் வழங்கும் திட்டத்தை சென்னை ஐஐடி தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டது. உயா்தர கல்வியில் சமமான அணுகல் இருப்பதை உறுதி செய்ய மத்தி... மேலும் பார்க்க

தினமும் 1,000 பேருக்கு காலை உணவு: அன்னம் தரும் அமுதக் கரங்கள் திட்டத்தின் 200-ஆவது நாள்

சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஏற்பாட்டில் செயல்படுத்தப்படும் ‘அன்னம் தரும் அமுதக் கரங்கள்’ திட்டத்தின் 200-ஆவது நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் ஆ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியில் மாற்றம்: பொருள்களின் விலை குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை - சிபிஐசி

ஜிஎஸ்டியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை தொடா்ந்து, பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்துக்கு (சிபிஐசி) புகாா்கள் வந்தால், அதுகுறித்து தொழில் துறை அமைப்புக... மேலும் பார்க்க

ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 2 மடங்காக உயா்வு

சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கையானது 2 மடங்காக உயா்ந்திருப்பது தெரியவந்துள்ளது. நாட்டில் ரயில்வே துறை 15 மண்டலங்... மேலும் பார்க்க

பிரிவினைவாதமே திமுகவின் திராவிட மாடல் அரசியல்: நிா்மலா சீதாராமன்

தமிழகத்தில் ஆளும் திமுகவின் ‘திராவிட மாடல்’ அரசியலில் பிரிவினைவாத மனப்பான்மை மேலோங்கி நிற்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளாா். ‘ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க முடிய... மேலும் பார்க்க

முதலீடுகளைக் குவிக்கும் தமிழ்நாடு: லண்டன் நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சிறந்த உள்கட்டமைப்பு, அமைதியான சூழல், திறமையான மனிதவளம் உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன என்று லண்டலின் நடைபெற்ற நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா். தமிழ்நாட்டு... மேலும் பார்க்க